"என்ன அதுக்குள்ள ஹாஷ்பிட்டல் வந்துட்டமா?? " என்றாள்
"ஏன்.. இது என்ன உங்க ஊர் மாட்டு வண்டினு நினைச்சியா... கார் மா கார் . பாஷ்டா ஓடும்" என்றான் நக்கலாக...
“ஆமா.. நாங்க கார் ஐ பார்த்ததே இல்லை பாரு..” என்று முகத்தை நொடித்தாள்
பின் பார்க்கிங்கை அடைந்தவன் காரை ஒரு இடத்தில் பார்க் பண்ணி விட்டு
"ஹ்ம்ம்ம் இறங்கு.. ” என்றான் அவளை பார்த்து
அதைக்கேட்டு கொஞ்சம் தயங்கியவள்
"வந்து... வந்து.. நாம பக்கத்துல இருக்கிற முருகன் கோயிலுக்கு போய்ட்டு வந்திடலாமா??? " என்றாள் தயங்கியவாறு
"எதுக்கு?? " என்று புருவங்களை உயர்த்தினான்
"இல்ல.. நானும் அத்தையும் வரும்பொழுது ஒவ்வொரு முறையும் அந்த கோயிலுக்கு போய்ட்டு தான் இங்க வருவோம்" என்று இழுத்தாள்
"ஏய்.. நீ என்ன என் பொண
...
This story is now available on Chillzee KiMo.
...
னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.. இருவருக்குமே ஒருவித நிம்மதியாக, சந்தோஷமாக, மனம் நிறைந்து இருந்தது....அப்படியே நின்று இருந்தனர் சில விநாடிகள்
இதை கண்ட பாரதிக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருந்தது..அந்த மோன நிலையை கலைக்க எண்ணியவள்
“ம்ஹும்ம்.. “ என்று தொண்டையை செருமி