பாரதியும் அவனிடம் பை சொல்லி விட்டு மறக்காமல் அவனுடை அம்மாவின் மொபைல் நம்பரை குறித்துக்கொண்டாள்.. பின் இருவரும் காரில் ஏறவும் அவன் காரை ஓட்டினான்...
கொஞ்ச நேரம் சென்றதும் ஏதோ நினைவு வந்தவளாக
“தேங்க்ஷ்... “என்றாள் அவனை பார்த்து..
“எதுக்கு?? “என்று தன் புருவத்தை உயர்த்தினான்..
“அந்த சிவாவுக்கு ஹெல்ப் பண்ணினதுக்கு... “ என்றாள்...
“ஹ்ம்ம்ம் இட்ஷ் ஓகே... ஷ்வீட் பாய்... “என்று சிரித்துக்கொண்டான்...
பின் இருவரும் அமைதியாக அந்த நாளை அசை போட்டனர்..
ஆதியின் மனமோ தன் குழந்தையை சிரிய உருவமாக, அது சுற்றிக்கொண்டெ இருந்ததை நினைத்து பரவசமடைந்தான்...
பாரதிக்கோ சுசிலா எழுந்து வந்து ஆதியை கட்டி கொண்டது திரும்ப திரும்ப நினைவு வந்தது... இவனுமே உருகித்தான் நின்றான் அந்த தாயின
...
This story is now available on Chillzee KiMo.
...
த இரவு நேரத்தில் சாலையின் இருபுறமும் இருந்த மஞ்சள் விளக்குகளில் இருந்து கசிந்த அந்த மங்கிய மெல்லிய வெளிச்சமும், பாரதியின் தலையில் வைத்திருந்த அந்த கொஞ்சமேயான மல்லிகையின் வாசம் கார் முழுவதும் பரவி இருக்க , ராஜாவின் மெல்லிய இசையும் சேர்ந்து அந்த சூழலை மிகவும் ரம்மியமாக ஆக்கி இருந்தது அவனுக்கு..