“ஓ.. நேற்று இரவு சாப்பிடாமல் இருந்ததால் அவனே ரெடி பண்ணி கொண்டு வந்து வச்சிருக்கான் போல “ என்று நினைக்கையில் தன் தந்தையின் ஞாபகம் வந்தது...
அவரும் அப்படித்தான்.. சில நேரம் பாரதி சாப்பிடுமுன் தூங்கி விட்டால், அவளை எழுப்பி தூககத்திலயே கொஞ்சம் ஊட்டி விடுவார்.. சில நேரம் அவள் தலைமாட்டில் எல்லாம் எடுத்து வைத்து மூடி வைத்திருப்பார்... இரவு விழித்தால் பசிக்கும் பொழுது எடுத்து சாப்பிடட்டும் என்று... அவளும் அது மாதிரி நிறைய தடவை சாப்பிட்டிருக்காள் பாதி தூக்கத்தில் எழுந்து.... அது நினைவு வரவும் கண்ணை கரித்தது அவளுக்கு....
“பரவாயில்லையே... இந்த சிடுமூஞ்சிக்கும் கொஞ்சம் பாசம் இருக்கும் போல.. எனக்காக செஞ்சு வச்சிருக்கான் “ என்று நினைத்துக்கொண்டாள்..
பின் அந்த சிவாவின் நினைவு வரவும்அவனுக்கு போன் பண்ணி கொஞ்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ேன்... பேசாமல் சாப்பிடு” என்று முறைத்தான்..
அவன் அதட்டலுக்கு பயந்து வேகமாக ஒரு ஷ்பூன் எடுத்து வாயில் வைக்கவும் புரை ஏறியது அவளுக்கு.. உடனே அவளின் தலையை தட்டினான்..
“ஏய்.. பார்த்து.. என் பிரின்ஷஷ்க்கு புரை ஏறப் போகுது.. ஏன் இப்படி வேகமா கொட்டிக்கிற..” என்று மீண்டும் அதட்டினான்