(Reading time: 31 - 62 minutes)

“போதுமா இந்த விளக்கம்?? ... இல்லை இன்னும் விளக்கனுமாமாமா... “ என்று இழுத்தாள்...

“போதும் போதும்ம்ம் ஏதோ ஓரளவுக்கு நுழைஞ்சது.... “என்று சிரித்தான்...

“சரி..  உன் மாமா போன் நம்பரை கொடு.. “ என்றான்..

“எதுக்கு?? “  என்றாள் சற்று அதிர்ந்தவாறு...

“ஹ்ம்ம்ம்ம் உன் வண்டவாளத்தை எல்லாம்...அதான் நீ சிங்கப்பூர் போறேனு சொல்லிட்டு இங்க சுத்திகிட்டு இருக்கியே அந்த நாடகத்தை அவர் கிட்ட சொல்லத்தான்.. “ என்றான் குறும்பாக கண்களில் சிரிப்புடன்...

அதை கேட்டதும் பாரதிக்கு கொஞ்சம் நடுங்கியது...

“ஐயோ!! இவன் பாட்டுக்கு ஏதாவது உளறி வைத்தால்.... அவங்க மனசு கஷ்டப்படுமே... அதுவு இல்லாமல் இப்பவே கிளம்பி இங்க வந்திருவாங்க.. அப்புறம் இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்துக்கு பலன் இல்லாமல் போய்டும்.. “ என்று பயந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

அத்தை... “ என்று கை தட்டியவள்

“அத்தை....  எப்படி இருக்கீங்க.. என்று கத்தினாள் சந்தோஷத்தில்..

“ஏய்... கத்தாத.. மெதுவா பேசு.. விட்டா இங்க இருந்தே அங்க கேட்கற மாதிரி கத்துவ போல இருக்கு... “ என்று சிரித்தான்...

அவனை கண்டு கொள்ளாமல் அவள் ஜானகியிடம் கதை அடிக்க ஆரம்பித்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.