“சரி.. இப்ப போன ஷ்பீக்கரில் போட்டு என் பிரின்ஷஷ் கிட்ட வை. இல்லை கொஞ்ச தூரம் தள்ளியே வை.. அவளுக்கு ரேடியேசன் எதுவும் ஆகும்” என்றான் சிரித்தவாறு... அதை கேட்ட பாரதி
“இவன் அலப்பறை தாங்கல டா சாமி.. “ என்று திட்டி கொண்டே போனை ஷ்பீக்கரில் போட்டு அவள் வயிற்றின் அருகில் கொஞ்சம் தள்ளி வைத்தாள்..
“ஹ்ம்ம்ம் வச்சுட்டேன்.. நீங்க உங்க இளவரசி கிட்ட பேசுங்க .. “என்று முறைத்தாள்
“ஹாய் பிரின்ஷஷ்.. நான் உன் டாட் பேசறேன்.. கேட்குதா?? “ என்றான் குரலில் ஒருவித உற்சாகம் மற்றும் பெருமையுடன்..
அதை கேட்டதும் அவனின் இளவரசி குதிக்க ஆரம்பித்தாள்.. இதுவரை எந்த மூவ்மென்ட் ம் இல்லாமல் இருந்து பின் திடீரென்ரு வயிற்றுக்குள் அசையவும் ஆ வென்று அலறினாள் பாரதி..
“ஏய் என்னாசுசு.??? “ என்று பதறினான் ஆதி மறுமுனைய
...
This story is now available on Chillzee KiMo.
...
்றாள்..
பின் அவளை பிடித்து இழுத்துக்கொண்டு அவள் அறைக்கு சென்றவன்
“சொல்லு... எதுக்கு இப்ப வெளில வந்த?” என்று கத்தினான் அதே கோபத்தில்
“அது.... வந்து... தண்ணி இல்ல.. அதான் கிச்சனுக்கு வந்தேன்... “ என்று முனகினாள்
“ஆமா மாரி எங்க??.. உன் கூடத்தான இருக்க சொன்னேன்?? “