(Reading time: 28 - 55 minutes)

“ஹ்ம்ம்ம் சரி மா .. அவ எப்படியோ போகட்டும் மா...எனக்கு என்ன வந்தது?? ..  எனக்கு என் பேபி முக்கியம்.. நான் என்  பிரின்ஷஷ்  கூடவே இருக்கனும்.. இனிமேல் அவளை நம்பி தனியா விட முடியாது... “ என்றான்..

இதுவரை ஒரு வித இளகிய நிலையில் இருந்தவன் முகம் மேலும் கடுப்பேறுவதை கண்ட ஜானகி,

“சே... வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறிட்டானா?? நான் கூட ஏதோ என் வழிக்கு வர்ரானு நினைச்சா இப்படி கவுத்திட்டியே முருகா.. “ என்று புலம்பி கொண்டே

“நாம ஒன்னும் பண்ண முடியாது பா...வேணா மாரியை இனிமேல் எங்கும் போகக்கூடாதுனு ஷ்ட்ரிக்டா சொல்லிடலாம்” என்றார் முன்பு இருந்த உற்சாகம் வடிந்தவராய்...

“மா...அந்த மாரியை இனிமேல் நம்ப முடியாது... நான் என் பிரின்ஷஷ் கூடவே இருக்கனும்... வேற  ஏதாவது  வழி இருந்தால் சொல்லுங்க “என்றான்..

...
This story is now available on Chillzee KiMo.
...

்... “  என்றார் அடுத்து அவன் என்ன சொல்லப் போறானோ என்று பயந்தவாறு

“நீங்க என்னதான் சொல்லுங்க.. எனக்கு மனசு வரல....இப்ப அவ நல்லவளாதான் இருக்கா... ஆனால் கல்யாணத்துக்கு பிறகு அந்த ஷ்வேதா பிசாசு மாதிரி மாறிட்டா?? இவள நம்பி திரும்பவும் ஒரு தரம் ஏமாற முடியாது மா ... “ என்றான் அடிபட்ட வலியுடன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.