(Reading time: 28 - 55 minutes)

“அது .. வந்து... அவங்க பேரனுக்கு உடம்பு சரி இல்லைனு அனுப்பி வச்சுட்டேன்”.. என்று அவள் முடிக்கு முன்னே

அவளை அடிக்க மீண்டும் கை ஒங்கவும் அவள் கண்ணை இறுக்கி மூடிக்கொண்டாள்...

ஓங்கிய கை தானாக இறங்கியது அவளின் அந்த பயந்த முகத்தை கண்டு..

“அறிவு இருக்கா?? .நீ இப்படி இருக்கும்பொழுது உனக்கு துணையாக இருக்கத்தான அவங்க இருக்காங்க.. அவங்கள போய் நீ அனுப்பிட்டு...இப்ப ஏதாவது ஆகியிருந்தால்??.. “

என்றவனின் உடல் விரைத்தது.. கை முஷ்டிகள் இறுகின..

“ம்ம்ம்... நீ அடங்க மாட்ட.... இதுக்கு ஒரு முடிவு கட்டறேன் .. நீ இப்ப படு .. நான் போய் தண்ணி எடுத்துட்டு வர்ரேன்” என்று அவளை படுக்கையில் விட்டு கீழ சென்றான்.

பாரதிக்கும் இன்னும் உடல் நடுங்கியது.. அவன் சொன்ன மாதிரி தவறி விழுந்து இருந்தால் என்னாகிய

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்த சுகத்தை அனுபவித்தான்...

பாரதிக்கும் அவனை அவ்வளவு பக்கத்தில் அதுவும் இளகிய நிலையில் காண உள்ளுக்குள் உருகி போனாள்..

சிறிது நேரம் பாரதியின் வயிற்றில் கை வைத்து இருந்தவன் அவன் இளவரசி மீண்டும் உறங்க ஆரம்பித்ததும் மெல்ல கையை விளக்கினான்..அவளும் புடவையை இழுத்து விட்டு கொண்டாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.