மித்ராவும் அதுவரை அந்தப் பாட்டியிடம் பயம் மட்டுமே கொண்டு இருந்தவள் தன் பாட்டியை பாசத்தோடு பார்த்தாள்.
மித்ரா ஷ்யாமிடம் “எல்லாவற்றிலும் எனக்கு நல்லதையே கிடைக்கச் செய்த கடவுள், குழந்தை விஷயத்திலும் நிச்சயம் நல்லதே கொடுப்பான் என்ற நம்பிக்கை இருக்கிறது அத்தான். உங்களின் நேசத்தோடு நிச்சயம் எந்த கஷ்டத்தையும் ஜெயிப்பேன்.” என்றபடி அவன் மார்பில் சாய்ந்தாள் மித்ரா.
மித்ராவின் வளைகாப்பு முடிந்து தன் தாய் வீட்டிற்குச் செல்ல, அங்கே சென்று ஷ்யாம் அடிக்கடி அவளைப் பார்த்துக் கொள்வதோடு, அவளைத் தைரியப்படுத்தும் வேலையை செவ்வனே செய்தான்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
ஷ்யாம் பயந்தது போல் அல்லாமல் மித்ரா பிரசவ வலியை நிதானமாக எதிர்கொண்டாள். அதே சமயம் மித்ரா பயந்தது போல் இல்லாமல் பெண் குழந்தை நல்லபடியாகவே பிறந்தது.
குழந்தை பிறந்த சந்தோஷத்தில், அந்த வீட்டின் இளவரசியான சுமித்ராவை சேகர் வீட்டிற்கு மகாராணியாக அனுப்பிவைக்க, சுமித்ராவின் இளவரசி பட்டதை ஷ்யாம், மித்ராவின் பெண் எடுத்துக் கொண்டாள்.
ஷ்யாமின் நேசம் காதாலாக மாறி, மித்ராவின் வாழக்கை ஜெயிக்கக் கற்றுக் கொடுத்தது.
ஹாய் பிரெண்ட்ஸ், இந்த கதையின் நோக்கம் ஒரு சிறு குறைபாடு உள்ளவர்களுக்குத் தேவையான சப்போர்ட் பற்றியதே. அதை முடிந்த வரை கொடுத்து உள்ளேன். உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி. இப்போது வெளியூரில் இருப்பதால் தனி தனியாக நன்றி தெரிவிக்கவில்லை. அடுத்த வாரம் ஒவ்வொருவரின் பேரோடு இந்தக் கதை பற்றிய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறேன் பிரெண்ட்ஸ். மீண்டும் நன்றி.
அடுத்த வாரம் மீண்டும் ஒரு புதுத் தொடரில் சந்திக்கிறேன்.
முற்றும்!
{kunena_discuss:1187}