"என்ன சொல்ல வரேன்னு கூட கேட்க மாட்டீங்களா"
"அப்படி இல்லை மா.நானும் நிறைய பேசனும்.நாளை பேசலாமே"
"சரி நாளைய விஷயம் நாளை.இப்போது ஒரு பதில் சொல்லுங்க என் மீது ஏதாவது கோபமா?வருத்தமா?நான் திருத்திப்பேன். சொல்லுங்க.என்னை விட்டு ஏன் விலகிபோறீங்க"
"கயல் உன் மீது எனக்கென்ன மா கோபம் எல்லாம்.... நீ ஒரு தேவதை"
அதற்குள் அவன் நண்பர்கள் பேரிரைச்சலாய் கூக்குரலிட
"இருங்கடா வரேன்"இது அறிவழகன்.
"பார்ட்டியா?நீங்களுமா?"
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
"நான் இல்லை கயல்.பசங்க தான். ரொம்ப கூச்சல் இரு அமைதி படுததிட்டு வரேன்..........(சற்று நேரத்தில்)கயல் லைன்ல இருககியா?"
"ம்ம்ம் என் மனம் பாரமா இருக்கு கொஞ்சம் பேசனும்...தனியா வந்து பேசறீங்களா"
"கயல் நீ ரொம்ப யோசிக்கற.நீ சந்தோஷமா இருக்கனும்"
"என் சந்தோஷமே நீங்க தான். ஆனால் நீங்க என் கிட்டயிருந்து விலகறீங்க.உங்களுக்கம் தெரியுது.தெரிந்து தான் செய்யறீங்க ஆனா ஏன் என்று தான் புரியலை.உங்க மௌனம் ரொம்ப கொடுமையா இருக்கு.என் மேல கோபம் வருத்தம் எது இருந்தாலும் வெறளிப்படையா சொல்லுங்க.ப்ளீஸ்"வார்த்தைகள் உடைந்து அழுகை வந்தது.
"அழாதே கயல்.உன் சிரிச்ச முகம் மட்டுமே என் பலம். நான் எப்பவும் போல் உன் கிட்ட பேசறேன்.எனக்கும் சில குழப்பங்கள் இருக்கு கயல்.அதான் நிதானமா நாளைக்கு பேசலாம் சொல்லறேன்.மற்றபடி எதுவும் இல்லை"
"ப்ரச்சனை இன்றைய மௌனம் மட்டுமில்லைங்க.ரொம்ப நாளாகவே இப்படி தான். முன்பு இருந்த நெருக்கம் இப்போது இல்லை. உங்களுக்கு தெரியலைன்னு பொய் சொல்லாதீங்க.என்ன ப்ரச்சனை சொல்லக்கூடாதா?"
"கயல் ப்ளீஸ் நாளைக்கு பேசலாம்...நான் வெளி....."
அதற்குள் அவன் நண்பன் ஒருவன் உச்சத்தில் கூச்சலிட்டான்
'நண்பா யு.எஸ். போனதும் என்னை மறந்துடாதே டா....கீப் இன் டச் மச்சீ'
"அய்யோ சரி போடா.....கயல் கயல்"
"உங்க நண்பர் உளர்றார்னு சொல்லுங்க....உண்மை இல்லைனனு சொல்லுங்க அறிவு"பதைபதைப்போடு நான்.
"கயல் அவன் உண்மையை தான் உளறிட்டான்.நானே நாளை சொல்லநினைச்சேன்.....நான் யு.எஸ் போறேன் கயல்.இன்னும் ஒரு மாதத்தில். கம்பனி பணிக்காக...ஆறு வருடம்"ஒருவாரு சொல்லி முடித்தான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஸ்ரீயின் "உன்னாலே நான் வாழ்கிறேன்..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
"என்ன சொல்றீங்க...."வார்த்தைகளை கண்ணீர் கரைத்து தொண்டையில் சிறை வைத்தது.
"நீ சந்தேஷப்படுவேன்னு நினைத்தேன் கயல்...என் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் கயல்.சேர்த்து இவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கிடைத்ததிலலை."
"வாழ்த்துக்கள் அறிவழகன்... ஆனால் நான் இந்த விஷயம் எப்படி ஏற்றுப்பேன் னு நிச்சயமா உங்களுக்கு தெரியும்"
இதற்கு மேல் அவனுடன் பேச முடியாமல் இணைப்பை துண்டித்துவிட்டு மனம் விட்டு அழத்தொடங்கினேன்.மனத்தின் பாரம் இறக்க நினைத்த எனக்கு இடியாய் பாரம் ஏற்றிவிட்டான்.நிரந்தர பிரிவிற்கு ஏதோ நாடகம் அரங்கேற்றுகிறான் என்று தோன்றியது. அவனுடன் சேர ஒவ்வொரு நாளாய் நான் ஏங்கி நிற்க என்னை விலக அவன் ஆயத்தம் ஆகிக்கொண்டிருக்கிறான்.
இரவே நீ விடியாமல் இரு.இந்த நொடி அப்படியே உறைந்து போகட்டும்.இதெல்லாம் வெறும கனவாய் இருக்கட்டும். நாளை தான் நான் அவனை சந்திக்கும் முதல் நாளாய் இருக்கட்டும்...கண்களை இருக மூடினேன்...பூனையைப்போல.சூரியன் அன்று மட்டும் தன் பணியை நன்றாக செய்தான்.அலைபேசியில் ஐம்பது அழைப்புகள் இருபது செய்திகள் நேற்றிரவு கனவல்ல என்பதை நிரூபித்தது.கண்களில் நீர் திரண்டது.
சிற்பம் செதுக்கப்படும்
Go to En Kathale story main page
{kunena_discuss:1244}