அதை கேட்டு அவன் மெல்ல வெக்கபட்டு சிரித்துகொண்டே
“வாயாடி..” என்று அவள் தலையை செல்லமாக கொட்ட வர , அதற்குள் அவள் இலாவகமாக கீழ குனிந்து கொண்டு நாக்கை நீட்டி பழிப்பு காட்டினாள் ஜனனி...
பெரியவர்களும் அவள் குறும்பை ரசித்த வண்ணம் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து சென்று ஹாலில் அமர வைக்க, ஆதி பவித்ராவின் அருகில் சென்று நெருக்கமாக அமர்ந்து கொண்டான்...
அதை கண்ட நந்தினிக்கு உள்ளம் கொதித்தது... ஏனோ தனக்கு சொந்தமானதை பவித்ரா பறித்து கொண்ட மாதிரி உணர்ந்தாள்...
மரகதம் சமையல் அறைக்குள் சென்று அனைவருக்கும் பழச்சாறு கொண்டு வந்து கொடுக்க, அனைவரும் அதை குடித்து கொண்டே வழக்கமான உரையாடல் தொடர, பவித்ரா ஏதோ நினைவு வர எழுந்து சென்று வேலை ஆட்கள் கொண்டு வந்து வைத்திருந்த ஒரு பெட்டியை திறந்து ஒவ்வொருவருக்கும் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
.
அவள் அந்த குழந்தையை கொஞ்சும் அழகை ரசித்து கொண்டிருந்தான் ஆதி.. உடனே அவனுக்கு அவள் தங்கள் குழந்தையை எப்படி கொஞ்சுவாள் என தோன்ற, பவித்ரா அவன் அருகில் நின்றிருக்க அவன் தோளில் சாய்ந்து கொண்டு அவன் குழந்தையை கொஞ்சுவதை போலவும் ஒரு குடும்பமாக அவன் மனக்கண்ணில் தோன்ற திகைத்து நின்றான் ஆதி..