“இல்ல ஜனனி.... அது முடியாது... இந்த இடம் எல்லாம் நிஷாந்த் தாத்தாவும் வாணியும் சேர்ந்து சம்பாதித்ததால் மற்றும் விவசாயம் அழிந்து விடக்கூடாது என்பதாலும் இருவரும் சேர்ந்து உயில் எழுதும் பொழுது இந்த வீடு நிலம் எல்லாம் நிஷாந்த் ம் அவனோட வாரிசுகளும் அனுபவித்து கொள்ளலாம்..
ஆனால் அதை யார்க்கும் விக்க முடியாது.. என்று எழுதி வைத்தனர்.. தங்கள் பிற்கால சந்ததியர் இந்த இடத்தை விற்று அழித்து விடக்கூடாது என்பதாலயே இந்த மாதிரி ஒரு ஏற்பாடு செய்தனர்... அதன்படி நிஷாந்த் இந்த இடத்தை அனுபவிக்கலாம்… ஆனால் விக்க முடியாது...
அவன் வளர்ந்து தொழிலை கையில் எடுக்க நாங்கள் இந்த பண்ணையை அவனிடமே திருப்பி கொடுக்க அவனோ இதை எல்லாம் தனக்கு வேண்டாம் என்று எங்களையே பார்த்துக்க சொல்லிட்டான்.. ஆனால் இதில் வரும் லாபத்தில் 25% மட்டும் அவன் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் அவர்கள் ஆதியை பற்றி பேசிக் கொண்டிருக்கவும் அப்படியே மறைந்து நின்று அவர்கள் பேசியதை எல்லாம் ஒட்டு கேட்டாள்...
அவன் இந்த பண்ணைக்கு சொந்தக்காரன் என்பதுக்கே அசந்து நின்ற அந்த இரு பெண்களும் அவன் அவ்வளவு பெரிய பணக்காரன்.. இல்லை கோடீஷ்வரன் என்று தெரிந்ததும் இன்னும் அதிர்ந்து நின்றனர்...