அதுக்காக இரவு பகலாக உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தனக்கு சொந்தமாக நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வந்தார்.. அவரோட கடின உழைப்பால் விவசாயம் நன்றாக வளர்ந்து கிட்ட தட்ட ஒரு ஏக்கர் நிலத்தை தன் சொந்த உழைப்பால் வாங்கினார்...
தனக்கு பின் தன் பையனும் விவசாயத்திற்கு வரணும் என்று ஆசைபட, நிஷாந்த் அப்பாவிற்கோ இந்த விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல் போனது.. அவருக்கு பட்டணத்தில் போய் தான் வேலை செய்வேன் என்று அடம் பிடித்து சென்னைக்கு போய்ட்டார்...
சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில்தான் ஆரம்பத்தில் வேலை செய்தார்... பின் அவருடைய முயற்சியாலும் தொழில் செய்ய வேண்டும் என்ற வேகத்திலும் இரண்டு ஆண்டிலயே சொந்தமாக ஒரு தொழிலை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தி வந்தார்... அவர் எப்பயாவது தான் தன் தந்தையை பார்க்க வருவார்...
...
This story is now available on Chillzee KiMo.
...
்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் தன் உணவை சாப்பிட்டு கொண்டிருந்தான்...
இதை கேட்ட ஜனனி
“மா .. அப்ப நிஷா அண்ணா நினைச்சா இதெல்லாம் விற்றுவிட்டு சென்னையில் இன்னும் பெரிய தொழிலா ஆரம்பிக்கலாம் இல்லை... “ என்று தன் சந்தேகத்தை கேட்க, தன் கண்ணில் இருந்த நீரை துடைத்து கொண்ட மரகதம்