பின் அனைவரும் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டே அந்த மாலை நேரம் இனிதாக கழிய, சிறிது நேரத்தில் மரகதம் எழுந்து இரவு உணவு தயாரிக்க சமையல் அறைக்குள் செல்ல சிறிது நேரம் கழித்து பவித்ராவும் எழுந்து சமையல் அறைக்குள் வந்தாள்..
மரகதம் வேணாம் என்று மறுத்த பொழுதும் அவளும் சிரித்துகொண்டே அவருக்கு உதவ, சிறிது நேரத்தில் அந்த நந்தினியின் அலட்டலில் கடுப்பான ஜனனியும் எழுந்து சமையல் அறைக்குள் வந்தாள்... அவளை கண்ட மரகதம்
“அடடா... பவித்ரா இன்னைக்கு மழை கொட்ட போகுது... என் பொண்ணு அதிசயமா கிச்சனுக்குள்ள வந்துட்டா..” என்று சிரிக்க
“மம்மி.. இது அநியாயம்.. நான் கிச்சனுக்குள்ள வந்ததே இல்லை??... நீ செஞ்சு வைக்கிரதை எல்லாம் டைனிங் ஹாலில் எத்தன முறை கொண்டு போய் வச்சிருக்கேன்... “ என்று சிணுங்கினாள்
“ஆமாம் இல்ல...
...
This story is now available on Chillzee KiMo.
...
் பெற்றோர்களை பற்றி கூறலானார்...
நிஷாந்த் ஓட அப்பா வழி தாத்தாவோட சொந்த ஊர் தான் இது.. அவர் அந்த காலத்துல விவசாய நிலங்களில் கூலி வேலை செய்து வந்தார்..அவருக்கு தனக்கு சொந்தமாக நிலம் வாங்கி அதில் தானே விவசாயம் செய்யணும் என்று ஆசை..