பவித்ராவும் அவளை வம்பு இழுக்க என்று தேடி மரத்தின் மேல உயரத்தில் இருந்த ஒரு காயை காமிக்க ,அடுத்த நிமிடம் ஜனனி அருகில் இல்லை.. சுற்றிலும் தேடி பார்க்க அவள் அந்த மரத்தின் மேல அமர்ந்து இருந்தாள்...
பவித்ராவுக்கு ஆச்சர்யமாக அவளும் அந்த மரத்தில் ஏற வேண்டும் என்க, ஜனனி இறங்கி வந்து எப்படி மரம் ஏறுவது என்று ஒரு இன்ஷ்டன்ட் ட்யூசன் எடுக்க, அதன் படி முதலில் வழுக்கினாலும் விடாமல் முயற்சி செய்து மெல்ல மேல ஏறி அந்த மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டாள் பவித்ரா..மேல இருந்து கீழ பார்த்தவள்
“வாவ்.. ஜனனி ... ரியலி சூப்பர்... வெரி எக்ஷைட்டட்.. எப்படி நீ இப்படி ஈசியா மரம் ஏறுன?? “ என்று ஆர்வமாக கேட்க
“இதுல என்ன இருக்கு அண்ணி... அதெல்லாம் சின்ன வயசுல கத்துகிட்டது... அப்புறம் எங்க அம்மா எதுக்காச்சும் திட்டினால், நேர
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் பாரம் தாளாமல் அந்த மரம் தலை குனிந்து நிக்க, அதை கண்டவள் மெய் மறந்து நின்றாள்.. அதன் அருகில் சென்று செல்பி எடுத்து கொண்டாள்..
பின் அருகில் இருந்த மற்றொரு மரம் இப்பொழுது தான் தார் போட்டிருக்க அதன் பூவை கண்ட ஜனனி
“அணி.. நீங்க வாழைப்பூ தேன் குடிச்சிருக்கீங்களா.. ?? “என்றாள்..