(Reading time: 19 - 37 minutes)

ஆகா.. இது நாம பிளான் பன்னது.. அதனால எந்த குறையும் இருக்க கூடாது.. எல்லாரையும் சரியா பாத்துக்கனும்.. பாதுகாக்கனும்..

நீ சொன்னது போல தான் அம்மூ எல்லாம் இருக்கு.. நாம தங்க போர ஹோட்டல், சுத்திபார்க்க போர இடம் எல்லாமே நம்ம கண்ரோல்ல தான் இருக்கு அம்மூ..

சாப்பாடு..

சூப்பரா இருக்கும்..

எப்பவும் கவனமா இருங்க.. நான் உள்ள போரேன்.. எல்லாரையும் எழுப்பரேன்.. அவள் சென்றவுடன்..

ஆகாஷ்.. எனக்கு இந்த கர்னி ரொம்ப புதுசா இருக்கா.. வித்தியாசமா இருக்குடா..

எப்பவும் அம்மூ.. புதிர் தான்.. எப்பவும் விளையாட்டு தனமாவே இருப்பா.. ஒரு தடவை நானும், அங்கிள்ளும் பிஸ்னஷ் பிராப்ளம் பத்தி பேசிகிட்டு இருக்கும் போது கூட உற்காந்து கேட்டுக்கிட்டு இருந்த அம்மூ.. ரொம்ப சுலபமா அவ தீர்வை சொல்லீட்டா.. எங்க ரெண்டு பேருக்கும் ஷாக்கா இருக்கும்.. அவள போல கவனிக்க ஆளே இல்லை.. எல்லாத்தையும் நோட்பன்னுவா.. அவ கண்ணுக்கு மட்டும் எப்படி இது எல்லாம் படுதுன்னு கூட யோசிப்பேன்.. இப்போ நான் லண்டன் போர புரோஜக்ட் கூட அம்மூ உதவி பன்னதால தான்.. அவ ஐடியாஸ் தான் எல்லாம்.. அதனால எப்பவும் நானும் சரி மாமாவும் சரி.. அம்மூகிட்ட எங்க யோசனைகளை பகிர்ந்துக்கொள்வோம்.. நல்ல ஐடியாஸ் கொடுப்பா..

சூப்பர்.. கர்னி எப்பவும் உங்களுக்கு ஸ்பெஷல் இல்ல..

அவளை எல்லார்க்கும் பிடிக்கும்.. என்ன மந்திரம் போட்டு வச்சிருக்காளோ..

சரி வா.. ஹோட்டல் வந்திருச்சு.. இருவரும் இறங்கி.. அனைவரின் ரூம்கீ கொடுத்து சில வரைமுறைகளை கூறி அனுப்பி வைத்தனர்..

அம்மூ வா உனக்கு எங்க ரூம்க்கு எதிர் ரூம்..

அப்போ உங்க ரெண்டு பேருக்கும் ஒரே ரூமா..

ஆமாடா.. ரூம் இல்ல.. எங்களுக்கு பிரச்சனை இல்ல அதான் சேர் பன்னிகிட்டோம்.. சரி வா கொஞ்ச நேரம் தூங்கு அம்மூ..

இது தான் அம்மூ உன் ரூம்.. எதிர் ரூம் நாங்க இருப்போம்.. எதுனாலும் உடனே கூப்பிடனும்..

வாவ்.. ஆகா இங்க நின்னு பாத்தா தோட்டம் ரொம்ப அழகா தெரியுதுடாம்மா.. ரொம்ப சூப்பர்.. எனக்கு இந்த இடம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. குழந்தை என ஆர்ப்பரித்தவளை இரு ஆண்களும் என்ன செய்ய என்பது போல பார்த்தனர்..

இப்போ தான் ஆகாஷ்.. நீ பேசினதை வச்சு கொஞ்சமே கொஞ்சம் மெச்சுரான பொண்ணுன்னு கர்னிய நினைச்சேன்.. ஆனா இப்போ மொத்தமா குட்டி பாப்பாவ போல இருக்கா.. இவளுக்கு எங்க பாப்பாவே பராவாயில்ல போல தோணுதுடா..

இதுக்கேவா.. இது வெறும் ட்ரைலர் தான் அபி.. இன்னும் நிறையா இருக்கு..

அது சரி.. இவள சமாளிக்கரது தான் நமக்கு பெரிய வேளை போல..

ரொம்ப சரி.. என இரு ஆண்களும் பெருமூச்சை வெளியிட்டனர்..

அம்மூ.. போதும்டாம்மா.. தூங்குடா..

ம்.. என அவள் உடனே ரூமிற்கு சென்றாள்..

அபி.. என்ன கொஞ்சம் கிள்ளுடா..

ஏன்டா..

இல்ல.. இந்த அம்மூ முதல் தடவையா.. நான் சொன்னதும் சரின்னு போராளே.. எதாவது உள்குத்து இருக்குமோ..

இப்போ நான் தான் உன்ன குத்தபோரேன்.. அவ டையடா தெரியரா.. அதான் தூங்க போயிட்டா.. வாடா நாம இப்போ ரெஸ்ட் எடுத்தாத உண்டு..

சரி வா.. இருவரும் நிம்மதியாக உறங்கினார்கள்..

நடுநிசி இரவில் விழிப்பு வரவே.. அபி எழுந்தான்.. பின் உறங்கியும் உறக்கம் அவனுக்கு பிடிபடவேயில்லை.. வெளியே சென்றாள் நன்றாக இருக்கும் என தோன்றவே எழுந்து சென்றான்..

அவனுக்கு முன்பாகவே மனு அங்கு நின்று வானத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள்..

அவளை அங்கு பார்த்தில் அதிர்ந்தவன்.. பின் மெல்ல கர்னி..

ஜித்து.. நீ தூங்களையா..

தெரில தூங்க முடியல்ல.. நீ இங்க என்னபன்னர கர்னி..

தூக்கம் வர்ல ஜித்து..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிரேமா சுப்பையாவின் "உன்னில் தொலைந்தவன் நானடி..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

என்ன ஆச்சு கர்னி.. நல்லாயிருக்க தானே..

ம்.. அது தனியா.. தூங்கி.. பழக்கம்.. இல்லாததுனால.. அவள் விட்டு விட்டு மென்றுமுழுங்கி சொன்னவளை.. புன்னகையுடன் பார்தவள்..

உள்ள போயி பாரு.. ஆகாஷ் கூட சரியா தூங்க முடியாம புரண்டுகிட்டு இருக்கான்..

அவன் எப்பவும் அப்படி தான் நான் இல்லனா தூங்கமாட்டான்..

அப்படியா.. ஆனா கர்னி.. அவன் கூட புரண்டாவது தூங்கரான்.. ஆனா நீ.. கிண்டலாக அவன் இழுத்து கூறியதில்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.