ஜித்து நீ கூட கிண்டல் பன்னரல்ல..
சரி.. முகத்தை அப்படி வைக்காத.. வா..
எங்க..
எங்க ரூம்க்கு..
என்ன.. நான்.. எப்படி.. அது.. அங்க..
ஏய்.. எதையும் யோசிக்காத கர்னிம்மா.. எப்படியும் அவன் இல்லாம நீயும்.. நீ இல்லாம அவனும்.. தூங்க போரது இல்ல.. அதுவும் புது இடம் வேர.. அதனால நீயும் எங்க கூடவே தூங்கலாம்.. வா.. தூக்கம் வருது கர்னிம்மா போலாம்.. என அவளை மேலே பேசவிடாமல் அழைத்து சென்றான்..
அவளும் தயக்கத்தை விடுத்து உள்ளே சென்றாள்..
என்ன ஒரு அழகான எண்ணம்.. எவ்வளவு அழகா அபி கர்னி, ஆகாஷ்யோட அந்த உறவை புரிஞ்சுகிட்டான்.. ஐய்யோ.. பசங்ககிட்ட பேச கூடாது.. பொண்ணுங்களை பார்க்க கூடாது.. என்னமோ இது எல்லாம் பெரிய தப்பு போல பேசுன காலம் எங்க.. ஒரே அறையில்.. ஒரே கட்டிலில் இருந்தாலும் கண்ணியம் தவறாத இளமைகளை பார்க்கும் போது பொறாமை கொள்ளவைக்கிறது.. என்ன பன்றது.. நான் இந்த தலைமுறையா இருந்தாலும்.. எங்க வீட்டுலையும் கொஞ்சம் கடுமையான விதிமுறைகள் இருக்கும்.. ரொம்ப லக்கி தான் கர்னி..
கட்டிலில் புரண்டு கொண்டு இருந்தவனின் அருகில் வந்த மனு.. ஆகா.. பட்டு.. மென்மையா அழைக்க..
அம்மூ.. என கண்விழித்தவனின் எதிரில் நின்று இருந்தாள் மனு..
அம்மூ.. இங்க என்ன பன்னர.. தூங்களையாடாம்மா.. பதறி எழுந்து அவளிம் கேட்கவே..
தூக்கமே வர்லடா டப்பா.. அதான் இங்க வந்தேன்.. என கூறி கண்சிமிட்டினாள்..
என்ன.. என்பது போல் அவன் அபியை பார்க்க...
அவ இல்லாம நீயும் இங்க புரண்டுகிட்டு இருக்க.. கர்னியும் தூங்காம நேரம் கெட்ட நேரத்துல வெளிய நின்னுகிட்டு இருக்க.. அதனால அவளும் இங்கையே தூங்கட்டும்டா..
அபி கூறியதை நிஜமா என்று வாயைபிளந்து பார்த்துக்கொண்டு.. உள்ளம் நெகிழ்ந்து மச்சான் என அணைத்துக்கொண்டான் ஆகாஷ் அபியை..
சரி மச்சி.. போதும் தூக்கலாம்.. நான் இங்க சோபால்ல தூங்கிகரேன்.. என அவன் தூங்க சென்றான்..
அம்மூ.. என்னடாம்மா தூக்கம் வர்லையா..
தெரியல்லடா.. ஆகா.. அதான் வெளிய நின்னு நட்சத்திரத்தை பார்த்துட்டு இருந்தேன்.. அப்போ தான் ஜித்து வந்து பார்த்து.. இங்கையே தூங்க கூப்பிட்டு வந்தான்.. நீயும் தூங்கலையாமே..
எல்லாரையும் விட்டு வந்திருக்க.. புது இடம் வேர நீ தனியா இருக்கமாட்டியே அதான் என்ன பன்னரன்னு யோசிச்சுகிட்டு புரண்டுகிட்டு இருந்தே.. ஏன் அம்மூ எதுனாலும் என்ன கூப்பிட சொன்னல்ல.. ஏன் தனியா வெளிய நின்ன..
நீயே ரொம்ப டையாடா இருப்ப.. நான் ஏன்.. தொந்தரவுன்னு தான்..
அடி வாங்குவ அம்மூ.. தொந்தரவா நீ எனக்கு.. இனி இப்படி பேசுன..
சரிடா.. சும்மா என்ன திட்டாம.. வா வந்து எனக்கு தட்டி கொடு.. என அவனின் மடியில் படுத்துக்கொண்டாள்..
புன்னகைத்துக்கொண்டே.. அவளின் தலையா வருடியபடியே.. அவளுக்கு தட்டி கொடுத்தான்..
அம்மூ..
ம்..
நான் சொல்லரத கேட்பியா..
ம்..
அம்மூ நான் லண்டன் போயிட்டா.. நீ என்ன பன்னுவ.. தனியா தூங்க பழகிகனும்டாம்மா..
அதை அப்போ பாத்துக்கலாம்.. இப்போ தட்டிகொடு..
அம்மூ.. நான் சொல்லரதை.. அவன் முடிக்கும் முன்னே.. அவள் எழுந்து..
டேய்.. நீ எங்க போனாலும்.. நான் தூங்கர நேரம் என்னை தூங்க வைச்சிட்டு போயி உன் வேளைய பாரு.. இதுக்கு மேல பேசுன கொன்னுருவேன்..
ஏன் அம்மூ.. எனக்கு ஒரு உண்மைய சொல்லு.. நீ கண்டிப்பா கும்பகர்னோட வழி சொந்தமா இருக்கும்ன்னு எனக்கு தோணுது நீ என்ன நினைகரேன்..
ம்... உன்ன நாலு மொத்தனும்ன்னு நினைக்கரேன்.. என அவனை நாலு அடிகொடுத்தவள்.. ஒழுங்கா தட்டி கொடுடா..
சரிடா.. நீ தூங்கு..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சசிரேகாவின் "என் வாழ்வே உன்னோடு தான்..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
ஆகா..
சொல்லுடாம்மா..
நீ எப்பவும் படர.. அந்த பாட்டு பாடுடா..
அது சரி.. பாட்டு எல்லாம் வேண்டாம்.. தூங்குடாம்மா..
போ.. நீ பாடலைன்னா நான் தூங்கமாட்டேன்..