Page 3 of 17
“ஏன் இப்படி பேசற தேவி, நான் என்ன கெட்டவனா” என அவன் கத்த அவனுக்கு மேல் கத்தினாள் தேவி
“சுயநலவாதி” என சொல்லவும் அவன் அதிர்ந்தே விட்டான்.
”இல்லை தேவி அப்படியில்லைம்மா”
“போதும்ணா இன்னிக்கு ராதாவுக்காக வீட்டை ஒண்ணாக்கின, நாளைக்கு அவள் கிடைச்சதும் பழைய மாதிரி நீ வலது இடதுன்னு வீட்டை பிரிக்க மாட்டேன்னு என்ன நிச்சயம், இப்பவும் கோவிந்த் அண்ணா இறங்கி வரலை, அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
வைச்சிக்கிட்டு நான் படற கஷ்டமே போதும் ராதாவும் படவேணாம்” என அவள் பேச பேச முராரியின் முகம் சுருங்கிவிட்டது. அவனது இதயமே கனத்துவிட்டது. அவன் அமைதியாக கண்கள் கலங்கி தேவியின் முன் கைகூப்பி நின்றான்