போறேன்.என்ன ரேஷ் சொல்றீங்க?”
“ரினி பேபி சொன்னா அப்பீல் ஏது…ஆத்வி மேரேஜ்ல பின்றோம்..”,என்றவன் அவளைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தான்.
“அடடா இவங்க ரொமன்ஸ் தாங்கலப்பா..கிடைக்குற கேப்ல எல்லாம் ரொமன்ஸ் பண்றீங்களே ஆசம் ஆசம்..”,இப்படி பேச்சும் சிரிப்புமாய் அன்றைய பொழுது கழிய எத்தனை கூறியும் கேட்காமல் ஜெயந்த் தன் காரிலேயே ரேஷ்வாவையும் ரினிஷாவையும் அழைத்துச் சென்றான்.
அன்று இரவு தனதறைக்கு வந்தபின் ஜீவிகாவிடம் மிகுந்த மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தான் ஜெயந்த்.
“ஜீவி எதிர்பார்க்கவே இல்ல இப்படி எல்லாரும் வருவாங்கனு.வீடே நிறைஞ்சு இருந்தது இல்ல.அம்மா அப்பாக்கு அவ்வளவு சந்தோஷம்.”
“ஆமா மாம்ஸ் நானுமே எதிர்பார்க்கவே இல்லை.ரேஷ் கூட ரொம்ப நாளா நமக்குத் தெரியும் அதனால வந்தாருனு வச்சுக்கலாம்.ஆனா ரினிஷா கூட எந்தவீத ஈகோவும் இல்லாம எவ்ளோ ஜாலியா பழகுறாங்க..ரேஷ்ஷோட நல்ல மனசுக்கு அவருக்காகவே வந்தவங்கனு தோணிச்சு..”
“உண்மைதான் ஜீவி நானும் அதை நினைச்சேன் நல்ல பொண்ணு..ஆனா வாழ்க்கையில ஒரு கட்டத்துல எல்லாருக்கும் தேவைப்படுறது காசு பணத்தை தாண்டி நிறைய அன்பும் சந்தோஷமும் தான்.”
“ரொம்பவே உண்மைங்க எத்தனை பணம் சம்பாதிச்சாலும் இந்த சந்தோஷமும் நிம்மதிக்கும் ஈடாகுமா..ஆனா எதிர்பாராத நட்புகள் தான் வாழ்க்கையில பல நேரத்துல பிரிக்க முடியாததா மாறிடுது.”
“ம்ம் ஆமா அத்தை வரேன்னு சொன்னாங்களே என்னாச்சு வரலை?”
“அது அம்மாகூட வேலை பார்க்குற யாரோ இன்னைக்கு ரிடெயர்ட் ஆகுறாங்களாம் அதனால சென்ட் ஆப் பார்ட்டி முடிய நேரமாய்டுச்சுனு சொன்னாங்க நாளைக்கு காலையில வரேன்னு சொல்லிருக்காங்க மாம்ஸ்..”
“ஓ..சரி சரி..ஜீவிம்மா நீ ஒழுங்கா டைம்க்கு தூங்கணும்..உடம்பை நல்லா பாத்துக்கணும்..சரியா?”
“அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே..நான் எப்பவும் போல ஜாலியா உங்க உயிரை வாங்குறேன்.நீங்க எங்களை பத்திரமா பாத்துக்கோங்க..ஓ.கே தான?”
“ம்ம் நீயே இப்படி இருக்க நம்ம புள்ளை இன்னும் பல மடங்கு பயங்கரமா இருக்கும்னு மட்டும் தெரியுது.எப்படி சமாளிக்கப் போறேனோ!”
“எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா மாம்ஸ்..உன்னால் முடியும் தம்பி..”
“இப்போ எதுக்கு தமிழ் பட டைட்டிலா சொல்லிட்டு இருக்க..ஒழுங்கா தூங்கு டீ பொண்டாட்டி..நீ