பெத்தவங்களும் அடக்கம்.இன்னும் சொல்லனும்னா உன்னைவிட உங்கப்பாக்கு அவன்தான் பெட் தெரியுமா..இதுக்கு மேலேயும் அவன் உன்கிட்ட ப்யூச்ர்ல புருஷன்னு எதாவது வால் ஆட்டினான்னு வை நான் எதுக்கு இருக்கேன்.அடி பிச்சுற மாட்டேன்.
சோ வாழ்க்கையில் உன்னோட முக்கியமான நாட்கள் இது ஒவ்வொரு செகண்டும் என்ஜாய் பண்ணணும் என்ன புரியுதா?”
“மம்ம் க்கா தேங்க்ஸ் அ லாட்..”,என்று பேசிக் கொண்டிருக்கும் போதே வெளியே பரபரப்பாய் சத்தம் கேட்க ஜீவிகா ஷான்யாவிடம்,
“ப்பா ஹீரோ ஹீரோயின் வந்தாச்சு போல..ஆனாலும் இவங்களுக்கு இந்த பில்டப் எல்லாம் கொஞ்சம் ஜாஸ்திதான் இல்ல..”
“அக்கா ஆனாலும் நீங்க இருக்கீங்களே எல்லாரையும் உண்டு இல்லைனு ஆக்குறீங்க..”
“நமக்குனு வாய்த்த அடிமைகளை நக்கல் பண்றதுல நமக்கு ஒரு ஆனந்தம்..அதெல்லாம் கண்டுக்க கூடாது..”
“என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம்..”
“பேசிக்கிட்டு இருக்கேன் ரினி செல்லம்..எப்போ வந்தீங்க?”
“ஹே ஹேய் எனக்கே வா எங்களைத் தான் கலாய்ச்சுருப்பீங்கனு தெரியும்..ஹே ஷான் வாழ்த்துக்கள்”,என்றவள் அவளை கட்டியணைத்து கன்னத்தில் இதழ் பதித்தாள்.
சரியாய் அந்தநேரம் ரேஷ்வா உள்ளே நுழைந்திருக்க ஜீவிகா வேண்டுமென்றே,”ப்பாபா ரினி கருகுற ஸ்மெல் ரூம் மொத்தமும் நிறைக்குது..பாரு உன் ஆளு பர்வையாலேயே எரிச்சுருவாரு போல..பாவம் மா நாங்க..”
பக்கத்தில் இருந்த சிறு தலையனையை எடுத்து அவள் தலையில் வைத்து அமுக்கியவனாய்,”இதெல்லாம் வாயா?இந்த மூட்டைப்பூச்சியை இன்னைக்கு நசுக்கிட்றேன் இரு..”,என ரேஷ்வா விளையயாட்டு போல் அழுத்தினான்.
“ஆ ஐயோ கொல்ல பாக்குறாங்களே..யோவ் மாம்ஸ் எங்கய்யா இருக்க என்னை காப்பாத்து..”
தலையணையை வைத்தவாறு சிரிப்போடே அங்கிருந்த சேரில் ரேஷ்வா அமர,”ஹலோ இது லேடீஸ் ரூம் உங்க ஆளுக்கு எந்த வித சேதாரமும் இல்லாம நாங்க பத்திரமா பார்த்துப்போம் நீங்க இடத்தை காலி பண்ணுங்க..”
“அதான நான் நிம்மதியா சைட் அடிச்சா உனக்கு பொறுக்காதே..எனக்கெல்லாம் வில்லன் வெளில இல்லை.உள்ளேயே தான்..”,என்றவன் அவளின் பின்னந்தலையைத் தட்டிச் சென்றான்.
“ஆனாலும் ரினி செல்லம் என் நண்பனை இப்படி சாஷ்டாங்கமா உன் கால்ல விழ வச்சுருக்க வேணாம்..பயபுள்ளை குட்டி போட்ட பூனை மாதிரி இல்ல சுத்திட்டு இருக்கு..”
“ஐயோ ஜீ இன்னைக்கு கல்யாணம் ஷான்க்கு அவளை கலாய்க்காம என்னை ஏன் ரவுண்ட் கட்ற..”
“ம்ம் எங்க கலாய்க்க பாய்ண்ட் கிடைக்குமோ அங்க தானம்மா கலாய்க்க முடியும்..”,
“ஆளை விடுங்க நான் போய் ஆத்வியை பார்த்துட்டு வரேன்..”,என்றவள் தன் சிவந்த முகத்தை மறைக்க பாடுபட்டவளாய் அங்கிருந்து ஓடியிருந்தாள்.
தொடரும்...