“என்னாச்சு??”
“இதுவரை ஒண்ணும் ஆகல..ஆனா இனி என்ன வேணாலும் ஆகலாம்..இல்ல ஷான்..”
“ஜீ உன்னை நான் சாவடிச்சுருவேன்.அமைதியா இரு..”,என்று பற்களை கடித்த ரினிஷா எழுந்து ரேஷ்வாவின் அருகில் சென்று ஜுஸ் தட்டை வாங்கிக் கொள்வதற்காக கைநீட்டி நிற்க ஒருமுறை அவளை ரசித்துப் பார்த்தவனாய்,
“ஜி ஷான் ஒரு நிமிஷம் கண்ணை மூடுங்களேன்”
“ஏன் ஏன் எதுக்கு அதெல்லாம் முடியாது..என்ன பேசுறதா இருந்தலும் எங்க முன்னாடியே தான் பேசனும்..இல்ல ஷான்..”
“ஆமாக்கா ஆமாக்கா”,என ஷான்யாவும் அவளோடு சேர்ந்து கொள்ள நமட்டுச் சிரிப்பு சிரித்தவனாய் அவர்களை பார்த்திருந்த ரினிஷாவின் இடக் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்து,
“மிஸ் யூ பேபி..ஜீ வாயை மூடு உள்ளே கொசு போய்ட போது..”,என்றவாறே நிற்காமல் சென்றுவிட ரினிஷா வின் முகம் சிவந்து விட்டிருந்தது.
“ஷான் நீ பார்த்த!!”
“அக்கா இனி யாராவது கண்ணை மூடுனு சொன்னா எந்த கேள்வியும் கேட்காம மூடிருவேன்க்கா..”
எனும்போதே ஆத்விக் அவன் மொபைலை ஷான்யாவிடம் கொடுப்பதற்காக உள்ளே வந்தான்.
“ஷான்”
“அடுத்து உனக்கு என்னடா நாங்க காதை மூடனுமா?”
“என்ன??”
ரினிஷா வேகமாய் வந்து ஜீவிகாவின் வாயை மூடிவிட்டு ஆத்வியிடம்,
“நீ வந்த விஷயத்தை சொல்லு ஆத்வி..”
“என்னவோ ஒண்ணும் சரியில்ல..வயித்துக்குள்ள புள்ளை இருக்குனு கொஞ்மாவது பொறுப்பிருக்கானு பாரு..அப்படியே நறுக்குனு கொட்ட போறேன்.கொஞ்ச நேரம் அமைதியா உக்காரு ஜி..ஷான் இந்தா அத்தை கால் பண்ணாங்க..உனக்கு ட்ரை பண்ணாங்களாம் நீ எடுக்கலையாமே அதான் கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்.”
அவன் அங்கிருந்து செல்லும் வரையிலுமே ரினிஷா ஜீவிகாவை விட்டு நகரவில்லை.அதன்பின் அயர்வாய் சோபாவில் அமர்ந்தவள் இருவரையும் பாவமாய் பார்த்திருந்தாள்.
“ரினி செல்லம் உன் அண்ணாத்தையை சீக்கிரமா மலையேறச் சொல்லு..போறபோக்கை பார்த்தா