கொண்டாடுவதற்கு.
“இதெல்லாம் சரியான போங்காட்டம் பத்து மாசம் உள்ளே வச்சு வளர்த்தது நான் இவ என்னடானா உங்க ஸெராக்ஸா வெளில வந்துருக்கா..ஒத்துக்கவே முடியாது..இப்போவே என்னை மாதிரியே ஜாடையில ஒரு பையன் வந்தே ஆகணும்.”
“என்ன ஜீவிக்குட்டி இப்படி அவசரப்பட்டா எப்படி வேணும்னா இன்னும் ஒரே வருஷம் பொறுத்துக்கோ..உன் ஆசை நிறைவேறிடும்..என்ன சொல்ற!”
“என்னது அதுகுள்ள மறுபடியும் முதல்ல இருந்தா அப்படியே ஓடிப் போயிருங்க சொல்லிட்டேன்.”
“ஜீவி கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு தூங்கு யாராவது வந்தாங்கனா நீ வாய் பேசுறதை பார்த்தே கண்ணு வச்சுடுவாங்க.மாப்பிள்ளை நீங்க வாங்க டாக்டரை பார்த்துட்டு வந்துருவோம்”,என்று மஞ்சுளா ஜெயந்தை அழைத்துச் சென்றார்.
“நானே ஒரு புள்ளைக்கு அம்மா ஆனாலும் இந்த மஞ்சு என்னை இன்னும் ஸ்கூல் பொண்ணு மாதிரி அதட்டிட்டு இருக்காங்க.டூ பேட் “,என்றவள் தன் மகளைப் பார்த்தவாறே சற்று நேரத்தில் தூக்கத்திற்குள் சென்றிருந்தாள்.
ரேஷ்வாவும் ரினிஷாவும் அடுத்த படத்தின் படபிடிப்பில் இருக்க முழுக்க முழுக்க காதல் கதை கொண்ட இதில் ஒவ்வொரு நாளும் அவர்களின் உண்மை காதலே அங்கு அனைவருக்கும் வெளிப்பட்டது.முக்கியமாய் இயக்குனர் அவர்களின் முந்தையே படத்தை இயக்கிய அதே நபர் என்பதால் நடிப்பின் வித்தியாசத்தை நன்றாகவே கண்டு கொண்டார்.
அன்றைய நாளும் படத்தின் மிக முக்கியமான பாடல் காட்சி படமாக்கப்பட்டிருந்தது.நாயகனுக்கும் நாயகிக்கும் திருமணம் முடிந்து அவர்களுக்கே உண்டான பிரத்யேக நாட்களைத் தொடர்ந்து குழந்தை பிறப்பதாய் முடியும் பாடல்.
திருமணத்திற்குப் பின்னான ஒவ்வொரு பார்வையும் தொடுதலும் எத்தனை காதலையும் தாபத்தையும் தாங்கி நிற்குமோ ரேஷ்வாவின் நடிப்பும் அத்தனை இயல்பாய் இருந்தது.ரினிஷாவே அவன் அன்பில் திக்கு முக்காடித்தான் போனாள்.
அதேபோன்று குழந்தை பிறக்கும் காட்சியில் அவன் துடிப்பும் கண்ணீரும் அத்தனை எதார்த்தமாய் இருந்தது.இன்னும் சொல்லப் போனால் அவனை சாதாரணமாக்குவதற்குள் ரினிஷா ஒரு வழியாகி விட்டிருந்தாள்.
“ரேஷ் ஏன் இப்படி பண்றீங்க?”
“தெரில பேபி ஐ வாஸ் டூ இமோஷனல்..”
“ரிலாக்ஸ் ரேஷ்..நடிப்புக்கே இத்த நிலைமைனா ப்யூச்சர்ல என் நிலைமை ரொம்ப பாவம் போலேயே!”