(Reading time: 16 - 32 minutes)
vellai pookkal ithayam engum malaruthe
vellai pookkal ithayam engum malargave

தொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 10 - புவனேஸ்வரி

வணக்கம் தோழமைகளே ! காலவரையறையற்ற இடைவேளைக்கு  பிறகு " வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே " தொடர்வது எனக்கு மகிழ்ச்சியெனில் அதனை ஆதரித்து துணை நிற்கும் சில்சீ கு வழக்கம் போலவே எனது அளவு கடந்த நன்றியுணர்வு உரைக்க விரும்புகிறேன் . கதையை விட்ட இடத்தில் தொடர்வது எனக்கே சவால் என்பது புரியும் பட்ச்சத்தில் அதை வாசிப்பவர்களுக்கு அதே சவால் இருக்கலாம் என்று கணிக்கிறேன்  . அதற்காகவே உங்களுக்கு சிரமம் குறைக்கும் விதத்தில் கதை சுருக்கத்தை சொல்லிவிட்டு தொடர் பதிவை எழுதுகிறேன் .

இதுவரை !

பிரபஞ்சன் , கார்முகிலன் , கதிரவன் ஆகிய மூன்று நண்பர்களின் இணைபிரியாத நட்போடு தொடங்குகிறது கதை . கர்ணன் மற்றும் துரியோதனின் நட்பிற்கு இணையாக நட்பினை போற்றுவதினால் அவர்களின் சொந்த வீட்டிற்கு "சுயோதசேனா" என்று பெயரும் சூட்டியுள்ளனர் . அவரவருக்கு குடும்பத்தினர் இருக்கிறார்களா ? ஏன் அவர்களை பிரிந்து மூவரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்ற கேள்விக்கான பதில் இன்னும் உரைக்கப்படவில்லை . பிரபஞ்சனின் குடும்பத்தினரைப் பற்றி மட்டும் ஒரு காட்சியில் விவரிக்கப்படுகிறது . தாயார் லீலாவது , தந்தை ரவீந்திரன் , தங்கை சந்திரமதி மற்றும் ஒரு தம்பி என மொத்த குடும்பமும் அவனது வரவுக்காக காத்திருக்கிறார்கள் . அவன்மீது எந்தவிக வெறுப்புமின்றி , அவன் வருவானென்று காத்திருக்கிறார்கள் .

இதுவரை அந்நியர்கள் என யாரும் தாங்காத அந்த வீட்டில் , திருமணக்கோலத்தில் மயங்கிய நிலையில் அடியெடுத்து வைக்கிறாள் , பிரசன்னலீலா . தான் கடத்தப்பட்டுவிட்டதாக கூறி கண்ணீர் வடிக்கும் அவள் , அந்த மூவருக்கு கேள்விக்குறியாகிறாள் . அதேபோல அவர்கள் மூவரும் அவளது சந்தேக பார்வைக்கு பலியாகிறார்கள் . தனக்கான நியாயம் கிடைக்கும்வரை அந்த வீட்டை விட்டு செல்வதாக இல்லை என்று சூளுரைக்கும் கதாநாயகியின் வருகையில் ஏதோ  திட்டம் ஒளிந்திருப்பது அவள் இறுதி அத்தியாயத்தில் தனது தங்கையுடன் பேசும் விதத்தில் புரியவருகிறது .

இதற்கிடையில் அவளுக்கு உதவும் விதமாக சுயோதசேனாவில் நுழைகிறாள் , ருத்ரா . ருத்ரா , மற்ற மூவரின் கல்லூரி தோழி . கதிரவன் மீது வற்புறுத்தல் இல்லாத  ஒருதலை காதல்நிலையில் இருந்தாலும் , சந்தித்த முதல் சந்திப்பிலேயே அதை லீலாவிடம் சொல்லி " அவன் என்னவன் " என்று நிலைநாட்டிக்கொண்ட அழுத்தக்காரி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.