அந்த அழுத்தக்காரியின் மன அழுத்தத்திற்கு தான் காரணமாவதை அறிந்தும் , அவளை ஒதுக்கி வைக்கிறான் கதிரவன் .
இன்னொருபுறம் , பார்த்த முதல் மாத்திரத்திலேயே கார்முகிலனுடன் மோதலுடன் அறிமுகமாகிறாள் நித்யா. ஏனோ அவளது அவசர குணம் அவனுக்கு ஆரம்பத்திலேயே அதிருப்தியை கொடுக்க , "ஐ லவ் யு " என்று சலனமே இல்லமால் சொல்லிவிட்டு அவளை கடந்து சென்றுவிடுகிறான் கார்முகிலன் . நித்யாவிற்குமே அவன்மீது கோபம் அதிகமாக இருக்க , அவர்களது "ஆதிரா " நிறுவனத்திற்கு நேர்முகத்தேர்வுக்காக வந்தவள் , அவனைக் கண்டதும் வேலையே வேண்டாமென தன்மையாக மறுத்துவிட்டு வருகிறாள் .
அங்கிருந்து வெளியேறும்போது , "கார்முகிலன் " என்ற அவனது பெயரை அறிகிறாள் . அந்த பெயரின் பின்னணி , அவளுக்கு ஏதோ நினைவுகளை தூண்டிவிட , அதை தன் தந்தையிடம் கூறாமல் மறைத்துவிடுகிறாள் . அதே நாளில் , நித்யாவை தவிர்க்க வெளியில் வந்த கார்முகிலன் ,மழையின் வாசத்திற்கே அஞ்சி நடுங்கி போக மற்ற இரு நண்பர்களும் அரணாகி அவனை அணைத்து கொள்கின்றனர் . மறுபுறமோ பிரசன்னலீலா அதே அடைமழையில் முழங்காலிட்டு அமர்ந்தபடி நனைந்து கொண்டிருக்கிறாள் . இனி ...
அடைமழையிலும் லாவகமாக மகிழுந்தை செலுத்திக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான் பிரபஞ்சன் . அவன் மகிழுந்தை நிறுத்தி இறங்குவதற்குள் , வீட்டின் காவலாளி குடையுடன் கதவினை திறந்தார் .
"எதுக்கு அண்ணா இப்படி ஓடி வர்றிங்க .. நான் கொஞ்சம் நனைஞ்சா கரைஞ்சிடவா போறேன் ?" வழக்கம்போலவே அன்புடன் கடிந்து கொண்டான் பிரபஞ்சன் . அவனது வசனத்திற்கு பதிலாக வாஞ்சையுடன் புன்னகைப்பவர் இன்று அதற்கு எதிர்மாறாக முகத்தில் கவலை ரேகைகள் பரவும்படி நின்றிருந்தார் .
"சொல்லுங்கண்ணா ஏதோ சொல்ல வரீங்க .. "
"இல்ல தம்பி ..அந்த பொண்ணு " என்று அவர் இழுக்கவும்,
"பொம்மாயிக்கு என்னாச்சு ?" என்றான் பிரபஞ்சன் . அவனது செல்லப்பெயர் அவரை வியப்பில் ஆழ்த்தியிருக்க வேண்டும் . ஆனால் , அதை உணர்ந்து ரசிக்கும் சூழ்நிலை ஏதுவாக இல்லை .
"என்னனு தெரியலப்பா .. வீட்டுக்கு பின்னாடி உட்கார்ந்து அழுதுகிட்டே இருக்கு. நானும் உள்ள போக சொல்லி கேட்டேன். ஆனா என் பேச்சைக் கேட்கவே இல்லை நீயாச்சும் போய்