தடுத்தது.
" சரி நீங்க சொன்ன மாதிரியே நான் காத்திருக்கிறேன்" என்றவள், அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு கணம் மௌனமாயிருந்தாள் . மீண்டும், " எங்கே மத்த ரெண்டு பேரும்?" என்றாள். " கார்கி கொஞ்சம் டல்லா இருக்கான் .. அதனால கதிரோடு ஆபீஸ்ல இருக்கான் .. இன்னைக்கு இங்க வர மாட்டாங்க .. அத சொல்லிட்டு நானும் போகலாம்னுதான் வந்தேன்" என்று பதிலளித்தான் பிரபஞ்சன்.
சட்டென அவளது முகம் வாடியது. "நானும் மனுஷிதான? உங்க வீட்டில இருக்கிற கல்லும் மண்ணும் மாதிரி எனக்கு உயிர் இல்லையா ?அப்படின்னு நினைக்கிறீங்களா? இப்படி நீங்க மூணு பேரும் மட்டும் ஒத்துமையா தனியா இருந்தீங்கன்னா, நான் தனியா இவ்வளவு பெரிய வீட்டில் என்ன பண்ணுவேன்? எப்படி நமக்கு உள்ள பரஸ்பர நம்பிக்கையும் நட்பு வளரும் ? " என்றாள் பிரசன்ன லீலா .
" அப்படி இல்ல மா.. உனக்கு எப்படி சொல்லி புரிய வைப்பதுன்னு எனக்கு புரியல" என்று பெருமூச்சு விட்டான் பிரபா .
" புரிய வேண்டியது எனக்கு இல்ல உங்களுக்கு தான்! முதல்ல உங்க மூணு பேரை தவிர உங்க உலகத்துக்குள்ள யாராவது வந்தா அவங்கள எப்படி நடத்தனும்னு யோசிங்க . நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லவங்களா இருந்தால் போதாது ! உங்களை சுத்தி உள்ளவங்களையும் கொஞ்சம் கவனிங்க . நாங்களும் உயிர் தான் !" என்று அவள் சொல்லும்போது தேவைக்கும் அதிகமான உணர்ச்சிகளில் இருப்பதாகத்தான்இருவருக்குமே தோன்றியது .
முகத்தில் இறுக்கம் பரவிட சிறிது நேரம் அமர்ந்து இருந்தாள் பிரசன்னலீலா . பிரபா சட்டென்று சுதாரிதான் .
" சரி நீயே சொல்லு என்ன பண்ணனும் ?" என்றான்.
" அவங்க ரெண்டு பேரையும் கிளம்பி வீட்டுக்கு வர சொல்லுங்க! உங்கள பத்தி தெரிய கூடாத விஷயம் தவிர தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் இருக்கும் இல்லையா ? அது பத்தி சொல்லுங்க.. நிறைய பேசலாம்" என்றாள் . "விட மாட்டியே!" என்று சிரித்தான் பிரபா . அவனது சிரிப்பை சம்மதமாக எண்ணிக்கொண்டாள் லீலா.
மூவரும் தங்களது சிறுவயது புகைப்படங்களை காட்டி அவரவர் செய்த சேட்டைகளைகதைகளாக அள்ளி தெளித்து வாரிக்கொண்டு இருந்தனர். தாங்கள் பள்ளியில் எடுத்த சான்றிதழ்கள் , தங்கள் வீரதீர பராக்கிரமங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர்அன்றைய தினம் அவர்கள் மூவருக்கும் மட்டுமின்றி