(Reading time: 16 - 32 minutes)
vellai pookkal ithayam engum malaruthe
vellai pookkal ithayam engum malargave

" வணக்கம் கார்முகிலன் சார் ! என்ன எங்க வீட்டு பக்கம்?" அகிலத்தில்  அவதரித்த ஒரே ஒரு பவ்யமான நங்கையை போல  நின்றிருந்தாள் அவள்அவனும் நல்ல மனநிலையில் இருந்தான்  போதும்அல்லது தான் வந்த காரியம் செவ்வனே நடக்க வேண்டும் என்று நினைத்தான் போலும்!

 மலர்ந்த முகத்துடன், " ஆஹா காலை வணக்கம் நித்யாஎன்ன இன்னும் கிளம்பாம  இருக்கீங்க?" என்றான்அவனை மேலிருந்து கீழென  பார்த்து வைத்தாள்  நித்யா. " ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் ஐ லவ் யு சொன்னான்இன்னிக்கு வீட்டு முன்னாடி நின்னுகிட்டு , உரிமையா வரலையானு கேட்கிறான்! ஒருவேளை உண்மையிலேயே இவனுக்கு நம்ம மேல கண்டதும் காதல் வந்துருச்சா ?" என்று மனக்குரலில் புலம்பினாள் .

 அவளது குரலை செவிமடுத்தவன்போல " ஹலோ மேடம் நான் ஒன்னும்  உங்ககிட்ட டேட்டிங் போகலாமான்னு கேக்க வரல ..  நேத்து நீங்க இன்டெர்வியூவுல  செலக்ட் ஆகி இருக்கீங்க .. ஆனாலும்  என்னமோ என்னால்தான் நீங்க வர மாட்டேன்னு சொன்னீங்களாமேஅதான் நானே உங்களை கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்என்றான் .

 இது என்ன வில்லங்கமா போச்சு ? என்று வாய்விட்டே சொல்லியிருந்தாள்  நித்யா

" நேத்தே வேலை வேண்டாம்ன்னு சொன்னேன்அதற்கான காரணத்தையும் சொல்லிட்டேன்..  அப்படி இருந்தும் காரணத்திற்கான குருவே நேர்ல வந்து வான்னு கூப்பிட்டா என்னை  மாதிரி சாமானியமான பொண்ணு அதிர்ச்சியாகாமல் இருக்க முடியுமா ?"

" அடடே என்னமா நித்யாஉன்னுடைய பணிவு பாதாளம் வரைக்கும் பாயுதே!"  பற்களை கடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டே கேட்டான் கார்முகிலன் .

" சார் உங்களுக்கு கோவம் வருது நினைக்கிறேன்..  ஆனா எனக்காக  ரொம்ப சிரமப்பட்டு அடக்கி வச்சிருக்கீங்கஇது என்ன  உங்களுக்கு தலையெழுத்தாபோனது போகட்டும் ! நீங்க இங்க வந்ததற்கான பெட்ரோல் செலவை நானே எடுத்துக்கிறேன்இந்த பேச்சை இதோட கைவிட்டுட்டு போயிட்டு வாங்க .!" என்றாள் .

" கமான் நித்யா! நீ  திறமையான பொண்ணுதான்அதை நான்   என்னோட நண்பர்கள் கதிரவனும் பிரபஞ்சனும் பேசும்போதே புரிஞ்சுகிட்டேன்! எனக்கு ஒத்து வராதுன்னு தெரிஞ்சும்கூட அவங்க உன்னை ஏத்துக்கணும்னு ரெடியா இருக்கும்போதே , உன் திறமை அவங்களுக்கு புரிஞ்சிருக்குனு நான் உணர்ந்தேன் .. சீஎல்லாமே ஒரு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.