" வணக்கம் கார்முகிலன் சார் ! என்ன எங்க வீட்டு பக்கம்?" அகிலத்தில் அவதரித்த ஒரே ஒரு பவ்யமான நங்கையை போல நின்றிருந்தாள் அவள். அவனும் நல்ல மனநிலையில் இருந்தான் போதும்! அல்லது தான் வந்த காரியம் செவ்வனே நடக்க வேண்டும் என்று நினைத்தான் போலும்!
மலர்ந்த முகத்துடன், " ஆஹா காலை வணக்கம் நித்யா! என்ன இன்னும் கிளம்பாம இருக்கீங்க?" என்றான். அவனை மேலிருந்து கீழென பார்த்து வைத்தாள் நித்யா. " ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் ஐ லவ் யு சொன்னான் . இன்னிக்கு வீட்டு முன்னாடி நின்னுகிட்டு , உரிமையா வரலையானு கேட்கிறான்! ஒருவேளை உண்மையிலேயே இவனுக்கு நம்ம மேல கண்டதும் காதல் வந்துருச்சா ?" என்று மனக்குரலில் புலம்பினாள் .
அவளது குரலை செவிமடுத்தவன்போல " ஹலோ மேடம் நான் ஒன்னும் உங்ககிட்ட டேட்டிங் போகலாமான்னு கேக்க வரல .. நேத்து நீங்க இன்டெர்வியூவுல செலக்ட் ஆகி இருக்கீங்க .. ஆனாலும் என்னமோ என்னால்தான் நீங்க வர மாட்டேன்னு சொன்னீங்களாமே? அதான் நானே உங்களை கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்" என்றான் .
இது என்ன வில்லங்கமா போச்சு ? என்று வாய்விட்டே சொல்லியிருந்தாள் நித்யா.
" நேத்தே வேலை வேண்டாம்ன்னு சொன்னேன்! அதற்கான காரணத்தையும் சொல்லிட்டேன்.. அப்படி இருந்தும் காரணத்திற்கான குருவே நேர்ல வந்து வான்னு கூப்பிட்டா என்னை மாதிரி சாமானியமான பொண்ணு அதிர்ச்சியாகாமல் இருக்க முடியுமா ?"
" அடடே என்னமா நித்யா, உன்னுடைய பணிவு பாதாளம் வரைக்கும் பாயுதே!" பற்களை கடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டே கேட்டான் கார்முகிலன் .
" சார் உங்களுக்கு கோவம் வருது நினைக்கிறேன்.. ஆனா எனக்காக ரொம்ப சிரமப்பட்டு அடக்கி வச்சிருக்கீங்க ! இது என்ன உங்களுக்கு தலையெழுத்தா? போனது போகட்டும் ! நீங்க இங்க வந்ததற்கான பெட்ரோல் செலவை நானே எடுத்துக்கிறேன்! இந்த பேச்சை இதோட கைவிட்டுட்டு போயிட்டு வாங்க .!" என்றாள் .
" கமான் நித்யா! நீ திறமையான பொண்ணுதான்! அதை நான் என்னோட நண்பர்கள் கதிரவனும் பிரபஞ்சனும் பேசும்போதே புரிஞ்சுகிட்டேன்! எனக்கு ஒத்து வராதுன்னு தெரிஞ்சும்கூட அவங்க உன்னை ஏத்துக்கணும்னு ரெடியா இருக்கும்போதே , உன் திறமை அவங்களுக்கு புரிஞ்சிருக்குனு நான் உணர்ந்தேன் .. சீ, எல்லாமே ஒரு