“இவன் செந்தமிழ் ஆதி” என்று நடந்த அனைத்தையும் ஆதியிடம் ஆதியோடு அந்தமாக ஒப்பித்தாள்.
அக்காவை காப்பாற்றிய செந்தமிழ் மேல் ஆதிக்கும் மிகுந்த பிரியம் ஏற்பட்டது.
“அவன் தீவை நோக்கி தான் அன்னிக்கு வந்திருக்கணும் ஆதி. என்னைக் காணலை என்று தேடியிருப்பானா” தேன்மொழி சிறு பிள்ளை போல சிறுவனான ஆதியிடம் கேட்டாள்.
“நீ இல்லை என்றதும் கடலுக்குள் சென்றிருப்பான்க்கா” தேன்மொழி அந்த ஜீவனுக்கு பெயரையும் சூட்டி ஒரு தோழனைப் போல குரிப்ப்ட்டதால் ஆதியும் அவ்வாறே குறிப்பிட்டான்.
ஏனோ தேன்மொழியின் மனம் கல் எறியப்பட்ட குளம் போல குழம்பிக் கிடந்தது.
அந்திப் பொழுதில் அந்தத் தீவிற்கு நித்தம் அவளை தேடி வரும் செந்தமிழ் இரவெல்லாம் அவளுக்காக அந்தப் பாறையில் காத்துக் கொண்டிருந்தான்.
செந்தமிழ் தேன்மொழியாள் இருவரும் மீண்டும் சந்திக்கும் காலம் வருமோ!
தொடரும்
Go to Senthamizh thenmozhiyaal story main page
{kunena_discuss:1218}