(Reading time: 12 - 23 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“டேய்... “ என்று கிருத்தியும், ராகவியும் அடிக்க வர,

“போடா டேய்.. நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்ட. எங்களைப் போட்டோ எடுத்ததும், அந்தக் கேமராவ உன்கிட்டக் கொஞ்ச நேரம் கொடுக்கலாம்ன்னு நினைச்சோம்” என்றனர்.

“நீங்க எல்லாம் அவ்ளோ நல்லவங்க இல்லையே. இதில் என்ன உள்குத்து பிளான் பண்ணிருந்தீங்க?”

“எதுவும் இல்லை.”

அதற்குள் அவர்களின் மற்றொரு பிரெண்ட்ஸ்

“டேய், இவங்க டூப் விடறாங்க. அந்த காமெரா நல்ல வெயிட். இவங்க ஹன்ட்பேக்கில் வைச்சு கை எல்லாம் வலிக்குது. கேமராவப் பத்திரமா வச்சுக்கோன்னு சொல்லி, உன்கிட்ட பையோட கொடுத்து விடற ஐடியா பத்திப் பேசினதை நான் கேட்டேன்” என்றான்.

“அடி ஆத்தி. இந்த ராட்சசிங்க பாசமாப் பேசும்போதே நினைச்சேன். டேய் கைப்புள்ள.. பீ கேர்புல். அவங்க கிட்டேர்ந்து எப்படியாவது உன்னைக் காப்பாத்திக்கோ” என்று அவனை பார்த்து அவனே சொல்லிக் கொள்ளவும், படகு முழ்தும் ஒரே சிரிப்பலை.இதே போல் கிருத்தி & கோ அரட்டையும், சிரிப்புமாக வர, ப்ரித்வியும் அதை ரசித்தவாறு அமர்ந்து இருந்தான்.

போட் சென்றுக் கொண்டிருக்கும் போது , இவர்களைத் தவிர ஏறியிருந்த சிலரில் ஒருவன், படகோட்டி அருகில் சென்றான். அவனின் அசைவைக் கவனித்த ப்ரித்வி , என்ன என்று யோசித்து எழுவதற்குள், வேறு சிலர் துப்பாக்கிகளோடு  பக்கத்திற்கு ஒருவராக எழுந்து நின்றனர்.

படகோட்டியின் அருகில் சென்றவன், அவன் கழுத்தில் துப்பாக்கி வைத்து மிரட்ட, போட் அப்படியே நின்றது. அவர்களில் ஒருவன் சட்டென்று கிருத்தியைப் பிடித்து இழுத்து அவள் நெற்றியில் துப்பாக்கியை வைத்தான்.

ஏதோ நாச வேலை செய்பவர்கள் அல்லது கொள்ளைக்காரர்கள் என்று எல்லோரும் எண்ணியிருக்க, கிருத்தியை டார்கெட் செய்யவும், ப்ரித்வி இது அந்த செல்வத்தின் வேலை என்று உணர்ந்து கொண்டான். ஆனால் அதை யோசிப்பதில் பயனில்லை என்று உணர்ந்தவனாக என்ன செய்ய என்பது போல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

போட் அதே லேக்கில் இருந்த மற்றொரு அரண்மனைக்குச் செல்லச் சொல்லி கூறவும், இந்த இடத்தில் எந்த செயல் செய்தாலும் எல்லோர்க்கும் ஆபத்தாகும் என்று எண்ணிய ப்ரித்வி, அந்த அரண்மனை செல்லும் வரைப் பொறுத்திருக்க முடிவு செய்தான்

போட் அந்த அரண்மனையை நெருங்க நெருங்க, ப்ரித்வி தன்னைத் தயார்படுத்திக்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.