(Reading time: 12 - 23 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

கொண்டான்.

அவன் ஊகித்தது போல் கிருத்தியை மட்டுமே இறங்கச் சொன்னார்கள். கிருத்தியின் மேல் துப்பாக்கிக் குறி வைத்தவன் மட்டும் அவள் பின்னே நிற்க, மற்ற நால்வரும் முதலில் இறங்கினர்.

படகோட்டியின் அருகில் இருந்தவன் மற்ற நால்வர் இறங்கவும், தானும் இறங்குவதற்காக வாயில் அருகில் சென்றான். அப்போது அவன் திடீர் என்று கால் தவறி விழ, வாயிற்படி அருகில் அமர்ந்து இருந்த ப்ரித்வி சட்டென்று அவனின் கைகளைப் பின்னால் முறுக்கி, தன் பாதுகாப்பிற்காக எப்போதும் வைத்து இருக்கும் துப்பாக்கியை அவன் நெற்றியில் அழுத்தினான்.

இந்தக் களேபரத்தில் கிருத்தி நெற்றியில் துப்பாக்கி வைத்து இருந்தவன் சற்றுத் தடுமாறவும், கிருத்தி சட்டென்று அவன் காலை இடறி விட்டாள். அவன் கீழே விழும் அந்த நேரத்தில், ப்ரித்வி படகோட்டியிடம்,

“பையா, ஆப் நாவ் ஷுரு கரேங்கே.” என்று ஹிந்தியில் படகை ஓட்டுமாறு கூறினான்.

அவரும் புரிந்துக் கொண்டு சட்டென்று மோட்டார் ஸ்டார்ட் செய்ய, படகு கிளம்பி விட்டது.

கீழே நின்று இருந்தவர்களில் ஒருவன் படகில் ஏற முயல, போட் கிளம்பிய வேகத்தில் அவன் நிலை தடுமாறி கீழே தண்ணீருக்குள் விழுந்தான்.

கிருத்தியின் அருகில் விழுந்தவனுக்கு கிருத்தி ஒரு கராத்தே வெட்டுக் கொடுத்து இருக்க, அவன் சுதாரித்து எழுவதற்குள் திலிப் மற்றும் சில நண்பர்கள் வந்து அவன் கைகளை முறுக்கினர்.

ப்ரித்வி அதற்குள் ,

“திலிப் , நம்ம உட்கார்ந்து இருக்கிற சீட் அடியில் கயிறு இருக்கிறதா பார்” என, திலிப் தேடினான்.

அவர்கள் தேடுவதை உணர்ந்த படகோட்டி , அவனே எங்கே இருக்கிறது என்று சொன்னான். டீசல் பற்றாக் குறையாலோ அல்லது வேறு காரணங்களாலோ போட் ஏரியின் நடுவில் நின்று விட்டால், அதை மற்றொரு போட்டோடு கட்டிக் கரைக்கு இழுத்து வர வைத்து இருக்கும் கயிறை எடுத்துக் கொள்ளச் சொன்னான்.

அதன் படி அந்த நீளமானக் கயிறை எடுத்து இருவரின் கை மற்றும் உடலோடு சேர்த்துக் கட்டி, அப்படியே சீட்டிலும் கட்டி விட்டனர்.

ப்ரித்வி, திலிப், ராகவி மூவரும் கிருத்தி அருகில் வந்து,

“கிருத்தி, உனக்கு ஒன்னும் ஆகலையே?” என்றுக் கேட்க,

“ஹேய், நாமல்லாம் யாரு? மேலே கை வைக்க விட்டுடுவோமா என்ன? என்று சாவகாசமாகக்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.