(Reading time: 12 - 23 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“வா கிருத்தி, “ என்றான்.

“சாப்பிட்டீங்களா?”

“ஹேய் என்ன?” என்று கேட்டவன், அவள் முகம் பார்த்துவிட்டு “சாப்பிட்டேன் மா” என்றான்.

பின் “ஹேய், ஏன் டல்லா இருக்க? போட்லே நடந்ததே நினைச்சுட்டு இருக்கியா?”  என்று கேட்டான்.

ஆம் என்பது போல் தலை அசைக்கவும்

“பயந்துட்டியா?” என்றுக் கேட்டான்.

அதற்குள் அவள் ஆம் என,

“ஹேய், கிருத்தி, நான் உன்னை பிரேவ்ன்னு நினைச்சுட்டு இருக்கேன். பயந்துட்டேன்னு சொல்ற?” எனக் கேட்டான்.

“நான் மட்டும்னா பரவாயில்லை. என்னாலே பாவம் இன்னிக்கு எல்லாரும் [பாதிக்கப் பட்டு இருப்பாங்கல்லன்னு நினைச்சா , ரொம்பக் கஷ்டமா இருக்கு” என்றாள்

“அப்படி எல்லாம் ரொம்ப யோசிக்காத. கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம்” என்றான்.

“ஏன் ப்ரித்வி, அவன் இத்தனை தூரம் பின் தொடர்கிறான். எப்படி நம்மளால் கண்டு படிக்க முடியவில்லை?

“அவன் முதலில் ஒரே வாகனத்தில் வருவதில்லை. அதோடு ஒரே முறையிலும் வரவில்லை. அடுத்து அவனின் போன் ட்ரெஸ் பண்ணலாம்ன்னு நினைச்சா , அவன் வேறே யாருக்கும் பேசறதில்லை. வீட்டுக்கு மட்டும் தான் பேசறான். அவன் பிரெண்ட்ஸ் போன் நம்பர், வச்சும் ட்ரேஸ் பண்ணினாலும் அதே மாதிரிதான் பண்றாங்க. நேரில் தான் போறாங்களோன்னுப் பார்த்தா அப்படியும் தெரியலை. ஏன் என்றால் அவர்கள் பிகானர் ஊரில் தான் இருப்பதாக தகவல். அதிலும் அறையை விட்டு வெளியில் வருவதும் இல்லை என்றும் கூறுகிறார்கள்”

அவன் கூறி முடிக்கவும், அதில் ஏதோ யோசித்த கிருத்தி,

“ஒருவேளை அவன் அங்கே ஹோட்டல் நும்பரில் பேசுகிறானோ ?” என்றுக் கேட்டாள்.

“இல்லைப்பா. அதையும் செக் செய்துட்டோம்” என்று கூறினான்.

மேலும் இருவரும் சிறிது நேரம் யோசிக்க ஒன்றும் புலப்படவில்லை. பின் ப்ரித்வி

“நீ உங்க பெரியப்பா கிட்டேப் பேசினியா?” என்றான்.

“இல்லை “ எனவும்,

“நீ பேசி இன்னைக்கு நடந்தைச் சொல்லு” எனக் கூற, கிருத்திகா வீட்டில் பயந்து விடுவார்களோ என்று தயங்கினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.