ப்ரித்வி அதைக் கண்டு கொள்ளாமல், தானே எடுத்து கிருத்திகாவின் பெரியப்பாவிற்கு அழைத்தவன், அவரிடம் முதலில் சாதாரணமாகப் பேசிவிட்டு, இன்று நடந்தைச் சொன்னான்.
ப்ரித்வி சொன்னதைக் கேட்டுத் திகைத்தாலும் அதைக் காண்பிக்காமல், ப்ரித்வி எடுத்த நடவடிக்கைகள் பற்றிக் கேட்டார்.
அவன் பதில் சொல்லவும், ப்ரித்வி சொன்னதை யோசித்தவர்,
“ஏன் ப்ரித்வி, அந்தச் செல்வம் செய்வது எல்லாம் ஒருவேளை அவன் அப்பாவை வைத்துதானோ” என்றுக் கேட்க, பிரித்விக்கும் சட்டென்று நூல் கிடைத்தது,
“புரிஞ்சது சார். நான் இனிமேல் அங்கே ஆளுங்களை விட்டும் கவனிக்கச் சொல்றேன்” என்றுக் கூறினான்.
கிருத்தியும் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். ப்ரித்வி பேசிவிட்டுக் கிருத்தியிடம் கொடுத்து விட்டு அங்கிருந்த டீ கடைக்குச் செல்ல,
கிருத்தியின் பெரியப்பா அவளிடம் நலம் விசாரித்து, அறிவுரைகளை வழங்கி முடிக்கவும், கிருத்தி
“பெரியப்பா , இந்த ப்ரித்விய உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றுக் கேட்டாள்.
தொடரும்!