தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 21 - கண்ணம்மா
ஆல் அண்ணீஸ் கமான் என்ற குரல் கேட்டதும் பெண்கள் சிலர் அந்த கூட்டத்தில் இணைந்ததோ ஆண்கள் உண்ட ஸ்பூனில் அவர்களும் உண்டது எதுவும் தெரியாது ஈஷ்வருக்கு. மனைவியின் கையால் உண்ட ஐஸ்கிரீமைத் தவிர. அனைத்தும் காலியாகி கொஞ்சம் நேரம் சென்றதும் தான் அதை உணர்ந்தான். ஆனால் அனைவரும் மகிழ்ச்சியான மனநிலையில் தானே இருக்கின்றனர். St அண்ணாவிற்கு தான் குழந்தை பிறந்துள்ளது. அவர் மனைவியும் குழந்தையும் தான் வெளிநாட்டில் உள்ளனர். ஆனால் இங்கு பௌவ் அண்ணி என்று அழைத்ததும் வந்தவர்கள் 5 பேர் இருக்கிறார்கள் எப்படி???? இதை அவன் வாய்விட்டு சொன்னதும் பௌவ்வை வந்து அணைத்து கொண்டாள் ஒரு பெண். . . (அட போங்கப்பா.... எப்ப பாரு என் பொண்டாட்டியை மட்டும் யாராவது ஒருவர் இப்படி கட்டிக்குறாங்க. என்னால் தான் ம்ம்ம்ம்ம்ம் என்று ஒரு பெரிய மூட்சீ மைண்ட் வாய்ஸ் ஓடு வந்தது.)
அண்ணி என்று பௌவ் அழைக்க ஏன்டி இப்படி பன்ற என்று முகத்தை கையால் மூடிக்கொண்டாள் அந்த பெண். போதும் விடுங்கள் என்று குரல் வந்தது பரமூவிடம் இருந்து. நிவி தலைமையில் ஓஓஓஓஹோ..... என்று கோரஸ் கூச்சல் ஈஷ்வருக்கு சிலதைச் சொன்னாலும் இப்போது அவன் மாமனை கலாய்க்க கிடைத்த அருமையான சாண்சை மிஸ் செய்ய விரும்பாத மச்சான் என்ன டா மாமா சத்தத்தை கானோம் என்றான் சிரித்தபடியே...
தாத்தாவின் வாய்வழியாக அவன் அரிந்தது தன் சகோதரியை கறைச்சேர்காமல் அவன் வாழ்கையைப் பற்றி யோசிக்க முடியாது என்றும், திருமண விஷையம் பேசுவதையே முடக்கி விட்டான் என்பதையும் தான். பௌவ்வின் எந்த முயற்சியும் அவனிடம் செல்லுபடி ஆகவில்லை என்பது தனிக்கதை. மற்ற அனைவருக்கும் இரண்டே வருடத்தில் திருமணத்தை முடித்து வைத்திருக்கிறாள் இந்த ராட்சசி. எஸ் டி யின் காதல் கதை தொட்டியில் வந்து நின்றதும் அதை அரிந்த தங்கை எடுத்த முயற்சி குடும்பத்தில் மூத்தவரான அண்ணன் பரமூவின் கல்யாணம் தான். ஆனால் தனது இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் ஆகாமல் அதைப் பற்றி சிந்திக்க கூட தயாராக அவன் இல்லை.
கமல் அண்ணாவின் மன நிலையும் அதுவே. மற்ற மூன்று அண்ணன்கள் மட்டும் சலைத்தவர்கல் இல்லை தான் ஆனால் ஊரில் மட்டும் இல்லாமல் உலகளாவில் சொத்து பேர் புகழை சம்பாதித்த குடும்பத்தில் சம்மந்தம் வேண்டும் என்று முடிவு செய்து பலர் முயற்ச்சி செய்தும் எதுவும் வேலைக்கு ஆகாது ஏமாற்ந்து திரும்பினர் பெண்களின் பெற்றோர்கள். ஒருவரைத் தவிர, ஆம் அவர் சட்டமன்றத் தலைவர். அவர் தன் பெண்ணை அந்த வீட்டில் கட்டிக்கொடுத்து அதன் மூலம் பெரிய திட்டங்கள் சாதிக்க முடிவு செய்தார்.
மகளிடம் அவர் இந்த விஷயத்தை சொன்னதும் மகளுக்கு கண்ணா லட்டு திங்க ஆசையா???