(Reading time: 28 - 55 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

இங்க வா என்று பக்கத்தில் அழைத்தவன், இதை கீரை கத்தையைப் போல் பிடிக்காமல் இதோ இப்படி இழுத்து இங்கே சொருவிக் கொண்டாள் பரக்காதுடா என்று புடவை முந்தியை அவள் இடுப்பில் சொருவப் போக தன்னிச்சையாக அவன் கையைப்பிடித்தவள் என்ன செய்ய போறீங்க என்றாள் கோவமாக.

(அது சரி இப்ப தான் குழந்தை மாதிரி சினுங்கினாள் இப்போ என்டா என்றால் பெரிய மனிஷி ஆயிட்டா) நீ தான டி பரக்குதுனு பொளம்புன...!!!

ம்ம்ம்ம்ம்ம்ம்... அதுக்கு நீங்க சொருவனும்னு இல்லை என் கிட்ட சொல்லி செய்ய சொல்லுங்க. இதெல்லாம் செய்ய நீங்கள் யார் ??

அடிங்.... இவள என்று அவள் கையை பிடித்து இழுத்து தன்னோடு அனைத்தவன் இனி‌என்னைத் தவிர வேரு எவன் பார்வைக் கூட உன் மேல பட விட மாட்டேன் டீ... நீ எனக்கு மட்டுமே சொந்தம் என்றவன் இடுப்பில் புடவையையும் அவனே சொருகி விட்டு கண்ணத்தில் முத்தம் போனஸ்சாக கொடுத்தான்.

அதன் பின் எந்த சத்தமும் இல்லை அவளிடம் இருந்து. வண்டியில் அமர்ந்தவளை நேராக ஐஸ்கிரீம் கடைக்கு கூட்டிச்சென்று நிறையவே வங்கித் தந்தான் அவள் எதையுமே சாப்பிடாமல் இருக்க மனம் சுட்டது அவனுக்கு. சின்னப் பொண்ணு அதைபோய் ஏன்டா மடையா என்று. வீட்டில் வந்து வண்டி நின்றதும் அவன் அவளுடன் ஜோடியாக வீட்டினுள் நுழைய உள்ளே பார்வதி பூஜை அறையில் சாமி கும்பிட்டு மணி அடித்து கற்பூரம் காண்பித்தார்.

அங்கே மகாலட்சுமியை அனைவருக்கும் தெரிந்து தான் இருந்தது ஆனால் ஜோடியாக இருவரும் சூப்பர் என்று முதலில் கூறியது குட்டித் தங்கை நிவி. 5ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த தங்கை அண்ணன் காதில் சூப்பர் என்று சொல்ல, பூஜை அறையினுல் மகாலட்சுமியை சிவா அழைத்துச் சென்றார். அம்பிகா அவளை சாமி விளக்கை ஏற்றி வைத்து விட்டு வாடா என்று அவர்கள் சென்று விட்டனர்.

சாமி விளக்கை ஏற்றி மனதார வேண்டியவள் கண் திரக்க அவள் முன் அவன் தான் பரமூ நின்று இருந்தான். காரணம் இல்லாமல் அவள் கண்ணீர் வடிக்க அவளை தன் தோலில் சாய்த்து ஆறுதல் கூரினான். எனக்கு உன்னை பிடித்து இருக்கு, நீ மட்டும் தான் என் மனைவி என்றான் அவளை அனைத்தவாரு.

அதுவரை அவன் தோலில் சாய்ந்து இருந்தவள் நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க... நீ சின்ப் பெண் தான் ஆனால் குழந்தை இல்லை. உன்ன பார்த்ததும் முடிவு செய்து விட்டேன் நீ தான்

2 comments

  • wow nice epi mam. :thnkx: big :thnkx: for 15 pages.kathai interesting aaga poguthu.eagarly waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
  • Lovely update sis. :clap: ... Oru Chinna request.... Ungaloda vasana nadaimurai mattum konjam space vittu tharingala.... Becz Padilla ore paragraph Mari irukku atha. :yes: ... Mathapadi.. as usual very interesting scenes .... Thank you :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.