(Reading time: 28 - 55 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

என் மனைவி என்று. ஆனால் இப்போது உனக்கு படிக்கும் வயது எனக்கு நிறையவே கடமைகள் மற்றும் பொறுப்புகள் உள்ளன சோ... நாம் இருவரும் நம் வேலையை முடித்த அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் செய்து கொல்வோம் சரியா டா... என்று அவன் பேசி முடிக்கவும் அண்ணா என்று நிவி அழைக்கும் சரியாக இருந்தது. நொடியில் பிரிந்து ஓடியவள் போன வேகத்திலேயே திரும்ப வந்து அவன் கண்ணத்தில் தன் முதல் முத்தத்தை கொடுத்தால். ஏய்ய்ய்ய்... என்று இவன் கத்தியது கற்றிடம் தான்.

ஓடி வந்தவளின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி வெட்கம் படபடப்பு... சிவா அத்தை , அப்பா எங்கே அமிர்தம் மாமா அப்பா என்னை அழைத்து போக வந்திருப்பதாக தானே சொன்னார்.

வந்துதான் இருந்தார்கள் டா செல்லம் ஆனால் அவர்கள் உன்னை அழைத்து போக இல்ல டா அவங்க ஏதோ அவசர வேலையா பாட்டி ஊருக்கு போகிறார்கள், உன்னை அழைத்துப் போனால் சரி வராது என்று உன் துணிகளை இங்கே கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்குல் வந்து விட பார்க்கிறார்களாம். ஊருக்கு போய் சேர்ந்ததும் உன்னிடம் போனில் பேசுவதாக சொன்னாங்க டா.

அத்தை நான் அங்கயே இருப்பேனே ஏன் இங்க துணியெல்லாம் கொண்டு வந்தாங்க.

உன்னை தனியா விடவா டா மா இங்க இத்தனைப் பேர் இருக்கோம்? இது உன் வீடு இல்லையா டா.

அத்தை ப்லீஸ் அத்தை பீல் பன்னாதீங்க, நான் அப்படி சொல்லல அத்தை. அவங்க உங்களை தொந்தரவு செய்வது போல் தெரிந்தது அதனால் தான் என்று தயங்கி தயங்கி பேசியவளை...

என் சமத்து குட்டி டா நீ . நீ எங்க கூட இருப்பது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் டா... நம் பௌவ் மாதிரியே நீயும் சரியான குரும்புகாரீ, பார்க்கவும் அவள் சாயல் இருக்கு உன்னிடம் அதனால் தானோ என்னவோ பார்ததும் நம்பவீட்டில் நீ ஒட்டிக்கொண்டு விட்டாய்.

(அன்னை சொன்னதும் தான் எது அவனை அவளிடம் இழுத்தது என்றும் புரிந்தது. நம்ம பாப்பா மாதிரியே சேட்டை, தூய்மையான அன்பு, மனதை செலுத்தியது இதனால் தானோ... ஏற்கனவே அவள் ஒருத்தியே வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் ஒரு வழியாக்குவாள், இவளும் சேர்ந்தாள் ஒரே குஷி தான். பாப்பாவிடம் இவளைப் பற்றி இப்போது சொல்லக் கூடாது . அவளே வந்து பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.) இதர்கு நடுவில் மகா இங்கேயே 2 நாள் தங்கும் செய்தி தெரிந்ததும் இன்னும் சந்தோஷம் தான். உடையை மாற்றி பாவாடை சட்டையில் நிவியுடன் என்னவோ விளையாடிக் கொண்டிருந்த மகா இடை இடையே அவனையும் தேடியபடி இருந்தாள். ( இவனோடுட தங்கபோகும் விஷையம் அவளை பயங்கர எக்சைட் ஆக்கி இருப்பதும் அவள் மனம் ஒரு நிலையில் இல்லை என்பதை நிவி மகாவிடம் "அக்கா

2 comments

  • wow nice epi mam. :thnkx: big :thnkx: for 15 pages.kathai interesting aaga poguthu.eagarly waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
  • Lovely update sis. :clap: ... Oru Chinna request.... Ungaloda vasana nadaimurai mattum konjam space vittu tharingala.... Becz Padilla ore paragraph Mari irukku atha. :yes: ... Mathapadi.. as usual very interesting scenes .... Thank you :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.