தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 01 - ஸ்ரீ
அழகிய இரவு நேரத்தில் எங்கும் விளக்குகள் ஜொலி ஜொலிக்க இந்தியாவின் பிங்க் நகரமான ஜெய்ப்பூர் மிளிர்ந்து கொண்டிருந்தது.1876 ஆம் ஆண்டு ராணி விக்டோரியா இந்தியாவிற்கு சுற்றுலா வந்த பொழுது மகாராஜா ராம் சிங் அவரை வரவேற்கும் விதமாக அத்தனை கட்டிடங்களையும் பிங்க் வண்ணம் கொண்டு வர்ணம் செய்தார்.பொதுவாக பிங்க் என்பது ஹாஸ்பிடாலிட்டியை குறிக்கும் நிறம் என்பதால் அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.
அப்படி வந்த பெயர்காரணமே இந்த பிங்க் சிட்டி.இன்றளவும் அதை சட்டப்படி அனைவரும் கடைப்பிடித்து அனைத்து கட்டிடங்களும் இளஞ்சிவப்பு வண்ணத்தைக் கொண்டே மிளிர்கிறது.
அந்த நகரின் அழகை கவனித்தவாறே காரில் தான் செல்ல வேண்டிய இடத்தை எதிர்நோக்கி அமர்ந்திருந்தாள் ஷியாமா. ஷியாமா ராகவன் டெப்யூட்டி டேரக்டர் ஆப் இன்வெஸ்டிகேஷன்,சிபிஐ.
இருபத்தி ஏழு வயதான பெண்ணவள்,ஆறடிக்கும் சற்று குறைவான உயரம்.கோதுமையும் வெள்ளையும் அல்லாத அழகான நிறம்.கூர்மையான கண்கள்.வயத்திற்கு சம்மந்தமே இல்லாத ஒருவித கம்பீரம் நிறைந்த இறுக்கமான முகம்.
ஜெய்ப்பூரின் அழகான சாலைகளையும் ஒளிரும் விளக்குகளையும் எவ்வித ரசனையுமின்றி அதே நேரம் கண்ணில் படும் காட்சிகளை மனதில் பதித்துக் கொண்டே வந்தாள்.
சற்று நேரப் பயணத்தில் அந்த அழகான வீட்டை அடைந்தவள் ஓட்டுநரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுத் தன் பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்ல எத்தனித்த நேரம் செக்யூரிட்டி அவளை அழைத்தவாறே ஓடி வந்தான்.
“க்யா மேடம் கோன் ஹே?”
“மிஸ்டர் மகிழன் வர்மா வை பார்க்கனும்..”அவன் முழுப்பெயரை அழைத்த விதத்திலேயே இன்னுமாய் மிரண்டவன் அவசரமாய்,
“நீங்க யாரு என்ன விஷயமா பார்க்கனும்னு சொல்லுங்க அப்பறம் நான் சார்கிட்ட கேட்டுட்டு உங்களை அனுப்புறேன்.”
“ட்யூட்டி நேரத்துல கேட்ல இல்லாம போனதே தப்பு..இப்போ வந்து ரொம்ப கடமையை காட்டாதீங்க..இப்போ நான் உள்ளே போகணும் தேவையான விளக்கத்தை உங்க ஐயாகிட்டயே சொல்லிருக்கேன்.புரியுதா?”
அதற்குள் மாடியில் இருந்து அனைத்தையும் பார்த்திருந்தவன் செக்யூரிட்டிக்கு இன்டர்காமில் அழைத்தான்.அவன் பயத்தோடு ஓடிச்சென்று அழைப்பை ஏற்று பேசிவிட்டு வந்து அவளை உள்ளே செல்லுமாறு கூற சற்றே கடுப்படைந்தவளாய் உள்ளே நுழைந்தாள்.
அவள் உள்ளே நுழைவதற்குள் கையில் அவளுக்கான பழரசத்தோடு வேலையாள் காத்திருக்க