தடுத்துப் பிடித்திருந்தான் மகிழன்.
“இந்த நேரத்துல நீ இங்க என்ன பண்ற?”,சற்றே கோபமிருந்தது அவன் குரலில்.
“யாரோ கத்தின மாதிரி சத்தம் கேட்டுது..வெளில வந்து பார்த்தா படியில யாரோ வேகமா ஏறி போனாங்க..இங்க இந்த ஒரு ரூம் தான இருக்கு..அதான்..”
“தேவையில்லாத விஷயத்துல தலையிடாம இருக்குறது தான் உனக்கு நல்லது.இன்னொரு தடவை இப்படி பண்ணாத..”
“வாட் யூ மீன்?”,அவளின் சந்தேகப் பார்வை கண்டு சற்றே நிதானித்தவன் ஆழ்மூச்செடுத்தவாறு அவளை அங்கிருந்து வரும்படி சைகை செய்தான்.கீழே அவளது அறையிருக்கும் தளத்திற்கு வந்தவன் அந்த பால்கனியிலிருந்து இருளை வெறித்தவாறு நின்றான்.
“அங்க தான் என் அம்மா இருக்காங்க.அவங்க மனநிலை பாதிக்கப்பட்டவங்க..”
“!!!”
“அப்பாவோட இழப்பு அவங்களுக்கு ரொம்பவே அதிர்ச்சியை கொடுத்துருச்சு..அப்போ இருந்தே ஒரு மாதிரி தான் இருப்பாங்க.கொஞ்ச வருஷத்துல மொத்தமா மாறிட்டாங்க..பொதுவா இப்படி எல்லாம் சத்தம் போடமாட்டாங்க..எப்போவாவது அவங்களுக்கு எதாவது டிஸ்டர்ப்ட்டா இருந்தா இது மாதிரி..பட் ரொம்ப ரேர்..
அதனால தான் உன்கிட்ட பேசினப்போ இத்தனை விவரமா சொல்லல..இன்னைக்கு என்னாச்சுனு தெரில..படியில கேட்ட சத்தம் அவங்களோட கேர் டேக்கரா இருக்கும்.மத்தபடி ஒண்ணுமில்ல.”,என்று பிசிறில்லாமல் கூறுபவனிடம் அதற்கு மேல் எதுவும் கேட்கத் தோன்றாமல் ஷியாமா அமைதியாய் நிற்க அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஒன்றும் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டான்.
இந்த வீடு இன்னுமின்னும் என்ன என்ன ரகசியங்களை சுமந்திருக்கிறதோ என்ற யோசனையோடே தனதறைக்குச் சென்றவளுக்கு அன்றைய இரவு தூங்கா இரவாய் அமைந்தது.
தொடரும்...