தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 02 - ஸ்ரீ
மறுநாளின் பொழுது சற்று சிந்தனையோடே தொடங்கியிருந்தது ஷியாமாவிற்கு.முந்தைய இரவின் நிகழ்வைப் பற்றிய எண்ணங்களே மனதை அரித்துக் கொண்டிருந்தது.கட்டிலில் அப்படியே படுத்திருந்தவள் பின் நேரமாவதை உணர்ந்து எழுந்து குளிக்கச் சென்றாள்.
தன் வழக்கமான உடையான ஜீன் டீஷர்டில் உயர்த்திப் போட்ட போனிடெயிலோடு கீழே வந்தவள் என்ன செய்வது என்று சுற்றும் முற்றும் பார்க்க பின் முப்பதுகளில் பெண் ஒருவர் ஓடி வந்தார்.
“வாங்கம்மா பெரியய்யா நீங்க வந்தா சாப்ட்டு வெயிட் பண்ண சொன்னாங்க.”
“ஓ..”,என்றவள் நிதானமாய் சாப்பாட்டு மேஜையை அடைந்து தனக்கான தட்டை எடுத்து வைத்து அமர்ந்தாள்.பின்னே வந்தவராய் அந்த பெண்மணி அவளுக்குத் தேவையான உணவைக் கேட்டு பரிமாறினார்.
“நீங்க?”
“என் பேரு கல்யாணி இங்க சமையல் வேலை பாக்குறேன்.எங்கம்மா காலத்துல இருந்தே இங்கேயே இருக்கேன்.”
“ஓ..”
அவர் ஏதோ கேட்க நினைத்து அமைதி காத்து நிற்பதைக் கண்டவளாய்,”என்ன ஏதோ கேட்க நினைக்குறீங்க?கேளுங்க..”
“ஐயோ இல்லம்மா அதெல்லாம் ஒண்ணுமில்ல..ஐயாகிட்ட எதுவும் சொல்லிராதீங்க..”
“அக்கா..நீங்க உங்க ஐயாவுக்கு மரியாதை கொடுத்தா போதும்.நான் இங்க விருந்தாளி தான் அதனால தயங்காம கேளுங்க”
அவள் பேச்சில் சற்றே தைரியம் பெற்றவராய்,”இல்ல நீங்க ஐயாவோட ப்ரெண்ட்னு சொன்னாங்க.நான் இங்க இருக்குற இத்தனை வருசத்துல அவருக்கு ப்ரெண்ட்னு யாரையும் பார்த்தது கிடையாது.இதுல நீங்க வீட்டுக்கே வந்துருக்கீங்களே..அதான்..”
“ஒரு ப்ரெண்ட் கூட கிடையாதா!!”
“என்னம்மா அவங்க ப்ரெண்ட்னு சொல்றீங்க உங்களுக்குத் தெரியாதா”,என்றவர் அவள் பதிலுக்குக் காத்திருக்க சற்றே தன்னை சீர்படுத்தியவளாய்,
“நானும் அவரும் யூஜில ஒண்ணா படிச்சோம் அதுக்கப்பறம் டச்ல இல்ல அதனால எனக்கு தெரில.”
,என்று எழுந்தவளுக்கு இந்த வீட்டின் வேலையாள் கூட இத்தனை யோசிக்கிறாள் என்றால் மற்றவர்களை சமாளிப்பது கஷ்டம் தான் போல என்ற சிந்தனை எழாமலில்லை..
ஹாலில் போடப்பட்டிருந்த அந்த மிகப் பெரிய சோபாவில் அமர்ந்தவள் அன்றைய நாளிதழைப்