“வாட் நான்சென்ஸ்..”
“கமான்..இது இங்க நடக்குற நிகழ்வுகளெல்லாம் வச்சு என்னோட கணிப்பு.மே பீ அது அப்படி இல்லாம கூட போகலாம்.பட்..”
“!!”
“அதற்கான வாய்ப்புகள் ரொம்வே கம்மி தான்.எனிவே ஒரு வேலையை முடிக்காம தற்பெருமை பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்காது.என்னை நீங்க குறைச்சு மதிப்பிட்டதுனால இந்த விளக்கம் கொடுக்க தோணிச்சு கொடுத்தேன்.சோ டோண்ட் இன்டர்பியர் இன் மை ஜாப்.அதுதான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது.”,என்றவள் வெளியே போகலாம் என்பதாய் கையை நீட்ட சற்றே கடுப்பானவனாய் வெளியே வந்தான்.
கதவைப் பூட்டிவிட்டு சற்று தள்ளி நின்றவளின் அருகில் வந்தவன்,”மதியானத்துக்கு மேல எல்லாரும் வந்துருவாங்க.கல்யாணி அக்கா எல்லாரையும் உனக்கு அறிமுகப்படுத்திருவாங்க.யார்கிட்டேயும் தேவையில்லாத எந்த பேச்சும் வச்சுக்காத.ஓகே?”
“யா பைன்..அண்ட் இந்த கீயை நான் வச்சுக்கலாமா?”
“எப்போ உனக்கு இந்த ரூம் பார்க்கணும்னு தோணிணாலும் எனக்கு கால் பண்ணு நான் வந்து அழைச்சுட்டு போறேன்.”
கொடுக்க முடியாது என்பதை நாசூக்காக அவன் கூறிவிட அவளும் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் தோள் குலுக்கி அங்கிருந்து நகர்ந்து விட்டாள். அதன் பிறகு அவனன் கிளம்பி காரில் ஏறி சென்றுவிட அங்கிருந்தே அவன் செல்வதைப் பார்த்திருந்தாள்.
பின் மீண்டுமாய் சமீன்தாரின் அறையின் அருகில் வந்தவளாய் அந்த கதவை கைகளால் வருடியவாறே தன் மொபைலில் படம் பிடித்துக் கொண்டாள்.அப்போது தன்னருகில் அரவம் உணர்ந்து திரும்பிப் பார்க்க சற்றே கடுமையான முகத்துடன் முறுக்கேறிய உடம்போடு ஒருவன் அவளை முறைத்து நின்றிருந்தான்.
“என்ன?”
“இங்கெல்லாம் நிக்க கூடாது.என்ன பண்ற? போ…”
மரியாதையின்றி விழித்ததே சற்று கடுப்பேத்தியிருக்க அவனுக்கு பதில் கூற வாய் திறந்த நேரம் கல்யாணி அவசரமாய் ஓடி வந்து நின்றார்.
“ம்மா..அவன் என் தம்பி தான்..தப்பா எடுத்துக்காதீங்க.பெரியய்யானா அவனுக்கு உசுரு.அவரும் இவனை தன் பேரன் மாதிரி தான் பார்த்துக்கிட்டார்.அவரோட இழப்பை இவனால தாங்கிக்கவே முடில.அதான் அவரு போனதுக்கப்பறம் ரொம்ப மனசளவுல பாதிக்கப்பட்டுட்டான்.