மனதினில் நினைத்தவளாய் தன் பெட்டியை திறந்து தனக்கான உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவள் அலுப்பு தீர குளித்து விட்டு அவன் கூறிய நேரத்திற்கு இறங்கி கீழே சென்றாள்.
அவளுக்கு முன் மகிழன் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருக்க அவளை கண்டவன் தன் போக்கில் ப்ரெட்டில் வெண்ணையை தடவியவாறே அருகில் இருக்கையை காட்டினான்.வந்தமர்ந்தவள் அவளுக்கான உணவைப் பார்த்து எடுத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள்.
இருவரும் சாப்பிடும் வரை அந்த இடமே அமைதியாய் இருக்க அதன் பின் அங்கிருந்து எழப் போனவளை கைசைத்து தடுத்தவன்,
“மிஸ்.ஷியாமா.உங்களுக்கு ப்ராப்ளம் இல்லனா ஓரளவு இந்த வீட்டைப் பத்தி சொல்லலாம்னு நினைக்குறேன்.பிகாஸ் நாளைக்கு எல்லாரும் வந்துட்டா இப்படியான டைம் நமக்கு கிடைக்கப் போறது ரொம்பவே ரேர் தான்.”
“எஸ் ஷுவர்..ப்ளீஸ்..”
“ம்ம் வாங்க என்றவன் அங்கிருந்து எழுந்து வாசலில் தோட்டத்தில் இருந்த பென்ஞ்சிற்கு அழைத்துச் சென்றான்.
“சோ எங்க பேமிலி கொஞ்சம் பெருசு.என் தாத்தாவுக்கு மூணு பசங்க இரண்டு பொண்ணுங்க.எல்லாருமே இங்க தான் இருக்காங்க.என் அப்பா அம்மா தான் மூத்தவங்க.என்னோட சின்ன வயசுல நடந்த ஒரு விபத்துல அப்பா இறந்துட்டார்.அம்மா அதுக்கப்பறம் அவங்க அறையை விட்டு வெளியே வர்றதே கிடையாது.என்னையும் அவங்களுக்கான கேர் டேக்கரையும் தவிர யாரையும் அலோ பண்ண மாட்டாங்க.
அடுத்த ரெண்டு சித்தப்பாக்களும் எங்களோட மார்பில் பிஸினஸ் பார்த்துக்குறாங்க.அத்தையோட கணவர்கள் தான் கார்மெண்ட்ஸ் பிஸினஸ் பாத்துக்குறாங்க.மத்தபடி எல்லாரையும் நாளைக்கு நேர்ல பார்க்கும் போது உங்களுக்கு ஓரளவு புரியும்.
அண்ட் என் பாட்டி இறந்து இரண்டு வருஷம் தான் ஆகுது அதுக்குள்ள தாத்தாவோட இந்த இழப்பு அன்எக்ஸ்பெக்டட்.எனக்கு இதை போலீஸ் கேஸ்னு கொண்டு போறதுல கொஞ்மும் இஷ்டம் இல்ல.என்ன பண்ணிணாலும் போனவர் வரப் போறதும் இல்ல..ஆனா வீட்ல இருக்குறவங்க தான் இதை பெரிய இஷு ஆக்கி சிபிஐ வரை கொண்டு போய்டாங்க.
போலீஸ் எல்லா சோதனையும் செஞ்சு ஒரு ப்ரோயஜனமும் இல்லனு போய்ட்டாங்க..இப்போ நீங்க..டூ வாட் எவர்..பட் எங்களுக்கான பெயர் வெளில எந்தவித சேதாரமும் ஆகிடக் கூடாது.காட் இட்?”