(Reading time: 15 - 29 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

நிருபிக்க வேண்டும். அதாவது அவருடைய கணவருக்கு துரோகம் இழைக்கவில்லை. அதிதி சொன்ன அந்த சம்பவம் எப்படி  நடந்திருக்கலாம்?

இருவர் தனித்திருந்த காட்சி தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம் அல்லது… அவன் ஏற்கனவே சொன்னதுபோல மனமும் மூளையும் செயல்படாத நிலையில் அவ்வாறு   நடந்திருக்கலாம்!. அதுபோல எப்போது ஆகும்? .

“ம்… காலைலேயே என்ன யோசனை சார்?. காபி கொண்டு வரவா? அல்லது குளிச்சிட்டு வர்றீங்களா?” என்ற அதிதியின் குரல் அவனை தடுத்தாட் கொண்டது.

“ம்… சீக்கிரம் குளிச்சு கிளம்பணும்…” என்றவனை வியப்பாக பார்த்தவளிடம்,

“மினிஸ்டர்கூட மீட்டிங் இருக்குல்ல” கிண்டலாக சொன்னான்.

“என்ன விசயமாக சார்?” அவள் கேட்டாள்.

“ம்.. அவரை பார்த்து மனு கொடுக்க போறேன்.”

“எதுக்கு….! ஓ….  நீங்க கலாய்ச்சிட்டு இருக்கீங்களா?”

“நீ என்னை கலாய்க்கலையே?”

“சே…. சே… அப்படி எல்லாம் இல்லை. உங்களுக்கு என்ன பிரச்சினை?”

“இந்த டைவர்ஸ் பிராசஸ்தான்…” அந்த நடுஇரவு ஆவி பிரச்சினையும்தான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். இன்னும் இரண்டு மூன்று மீட்டிங் அந்த ஆவியுடன் நடந்தது எனில் இந்த ஊரை விட்டு போகும் முன் அதை விரட்டுகிறேன் என்று சாதாரண சைன்டிஸ்ட் ஆக இருக்கும் அவன் பேயை விரட்டும் பாராசைன்டிஸ்ட் ஆக சான்ஸ் இருக்கு!

“அதுகென்ன… இதோ இன்னிக்கு மூன்றாம் நாள்… இப்படியே பத்து நாட்கள் முடிந்து விடும்… அப்புறம் காட்டிற்குதான்…” அதிதி அவனை ஆறுதல்படுத்தினாள்.

“இல்லம்மா… அந்த செயல் திட்டத்தில் சிறு மாற்றம் வந்திருக்கு.” என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பினர். அங்கே கங்காதரன் -அதிரதனின் அப்பா- நின்று கொண்டிருந்தார். கூடவே வேறு ஒருத்தரும் நடுத்தர வயது உடையவர் இருந்தார்.

“வாங்கப்பா…” என்று வரவேற்றான். என்ன மாற்றம் செய்யப்பட்டிருக்கும்? என்ற யோசனையும் எழுந்தது.

“வாங்க மாமா” என்ற அதிதியிடம் தலையசைத்தவர் அருகிலிருந்தவரை சுட்டிக் காட்டி,

“இவர் பாஸ்கர். கோர்ட்டால் நியமிக்கப்பட்ட அஃபிஸியல். அந்த ஆர்டரை நீங்கள் பின்பற்றுகிறீர்களா என்று கண்காணிப்பவர். உங்களிடம் பேச வந்திருக்கார்.” என்ற்வர் வ்ரிடம் திரும்பி,

“சொல்ல வந்த செய்தியை சொல்லுங்கள்.” என்றார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.