அவளைப் பார்த்ததும் திடுக்கிட்ட மூவரும், கிருத்திகா பழச்சாறுக் குடிப்பதைப் பாரத்துவிட்டு இதற்குதான் வந்து இருக்கிறாள் என்று தங்களுக்குள் புரிந்து கொண்டனர்.
பின் இவர்களும் அருகில் இருந்தக் கடையில் ஏதோ வாங்குவது போல் நின்று இருக்க, கிருத்தி பழச்சாறு அருந்தி முடித்ததும் அவள் வந்த திசையில் திரும்புவதற்குப் பதிலாக எதிர்த் திசையில் நடக்க ஆரம்பித்தாள்.
கிருத்தியைக் கடத்த வந்தவர்களும் பின்தொடர்ந்தனர். இந்தத் திருப்பத்தில் உள்ளே செல்ல, செல்ல அந்தப் பகுதிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆளரவம் குறைந்துக் காணப்பட்டது.
அதைக் கண்டுச் சட்டென்றுப் பயப்பட்டவள் போல் சுற்றிலும் கிருத்திப் பார்த்து விட்டுப் பின் மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். நடந்தப் படியே தன் போனில் சும்மா டயல் செய்து விட்டு பேசுவதாகப் பாவனைச் செய்தாள்.
“ஹெலோ, ராகவி, எங்கே இருக்கீங்க? நான் வழி மாறி வந்துட்டேன் போலே இருக்கு?”
எதிர்முனையில் என்ன சொன்னார்கள் என்றுப் புரியவில்லை என்றாலும், கிருத்திப் பேசியதை வைத்து எந்த இடத்தில் நிற்கிறாள் என்ற விவரம் கேட்பதாகத் தோன்றியது. கிருத்தி அக்கம் பக்கம் பார்த்து விட்டு லேன்ட் மார்க் சொல்ல வாய் திறக்கும் போது, பின்னால் இருந்த மூவரில் ஒருவன் அவள் தலையில் கனமான பொருளால் அடித்தான். இதை எதிர்ப்பார்க்காத கிருத்திகா அடியின் வேகம் தாங்காமல் மயங்கி விழுந்தாள்.
அவள் மயங்கி விழுந்ததும் திகைத்த மற்ற இருவரும்,
“டேய் , ஏன்டா அடிச்ச? ஏடாகூடமா பட்டு இருந்தா என்ன ஆகிருக்கும்?” என்றுக் கேட்டனர்.
“அந்தப் பொண்ணு அவக் கூடப் போனில் பேசிட்டு இருந்தவங்க கிட்டே இந்த லேன்ட் மார்க் சொல்லியிருந்தா நாம கடத்த முடியாம போயிடும். எந்த இடத்தில் இவ காணாம போனான்னு இவங்க கண்டுப் பிடிக்கவே நேரமானாதான், நாம பாஸ் இருக்கிற இடத்துக்குப் போய்ச் சேர சரியா இருக்கும்” என்றுக் கூறவும், அவன் சொல்வதில் உள்ள உண்மை உணர்ந்தவர்களாக அடுத்த வேலையில் இறங்கினர்.
கீழே விழுந்தக் கிருத்தியை அங்கே இருந்த ஓர் கண் மறைவான இடத்தில் படுக்க வைத்துவிட்டு, மூவரில் முதலில் பேசியவன் கார் எடுத்து வரச் சென்றான்.
அந்த சாந்தினி சௌக் முகப்பிற்கு நேராக உள்ள பின் பக்க கேட் அருகே காரை நிறுத்துவிட்டு தன் நண்பர்களை அழைத்தான். அவர்கள் இருவரும் யாரும் அறியாதவாறு கிருத்தியை அந்தக் காரில் ஏற்றவும், கார் கிளம்பியது.
அந்தக் காரைப் ப்ரித்வி ஏற்பாடு செய்து இருந்த போலீஸ் சிலர், சீருடையில்லாமல்