(Reading time: 13 - 26 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“வீரனே, நம்பிக்கையைக் கைவிடாமல் தேடு. அவள் கிடைப்பாள். நான் மற்ற இடங்களிலும் தேட ஆள அனுப்பி விடுகிறேன். விடிவதற்குள் நல்ல செய்தி எதிர்பார்க்கலாம்” என்றுக் கூறிவிட்டுச் சென்று விட்டார்.

அக்பர் கிளம்பிய பின், சற்று நேரம் அமைதியாய் இருந்த இளவரசன், ராம் சிங்கைத் தேடினான்.

அக்பர் கிளம்பிய சிறிது நேரத்தில் அங்கே வந்து சேர்ந்த ராம்சிங்,

“இளவரசே, நாம் பயந்தது போல் இளவரசி , அக்பரிடம் தான் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்” என்றுக் கூறவும், திடுக்கிட்ட இளவரசன்

“உறுதியாகத் தெரியுமா ராம்சிங்?”

“முழுமையாக விசாரித்த தகவல் தான் இளவரசே. ஆனால் .. “ என்று இழுக்கவும்,

“என்ன?”

“தற்சமயம் , ராணி அங்கே இல்லை இளவரசே” என்றுக் கூறினான்.

“புரியவில்லை”

“ராணி அக்பரிடம் இருந்து தப்பித்து இருக்கிறாள்” என்றவுடன் , ராம்சிங், இளவரசன் இருவருக்கும் சந்தோஷமும், அதே சமயம் கவலையும் ஏற்பட்டது.

“அப்படி எனில், தற்சமயம் ராணிக்கு எந்த ஆபத்தும் இல்லை அல்லவா?” என்றுக் கேட்க,

“இல்ல சாப் “ என்றான் ராம்சிங்

“ராம்சிங், அக்பர் கோட்டையில் இருந்து வெளியேறக் கூடிய வழிகளில், நம் ஆட்களை நிறுத்தி வை. யார் கவனத்தையும் அறியாமல் வர வேண்டும் என்பதால், ராணி இரவு நேரத்தில் மட்டுமே அந்த வழியில் தப்பிக்க முடியும். நாம் அதுவரைப் பொருத்து இருக்கலாம்” என்று அனுப்பி வைத்தான்.

பின் கோட்டையின் நுழைவாயில் அருகே உள்ள மரங்களின் மறைவில் அமர்ந்து கொண்டு ராணி வெளியே வரக் காத்து இருந்தான் பிகானர் இளவரசன் ப்ரித்விராஜன்.

தொடரும்!

Episode # 41

Episode # 43

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.