"எஸ்" கம்பீரமாகவும் ஒருவித அதட்டலுடனும் ஒலித்தது அவன் குரல்.
தன்னை விட சீனியர்கள் இரண்டு பேர் அங்கு நிற்பதை கண்ட பவித்ரா அவர்களின் பின்னே ஒரு ஓரமாக நின்றாள்.
"ஐ திங்க் யூ ஹவ் காட் இட். வென் கேன் ஐ எக்ஸ்பெக்ட் இட்?" திரும்பியவன் அவர்களை பார்த்து கேட்டான்.
"சார் வி வில் டூ இட் இன் எ வீக் " -சீனியர் அக்கவுண்டண்ட்
"நோ நோ ஐ நீட் இட் இன் டூ டேஸ். யூ போத் கேன் லீவ் நௌ" என்றவன் திரும்பி அவளை பார்த்தான்.
பின் நேராக சென்று அவனின் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் சில நிமிடங்கள் அமைதியாக அவளையே பார்த்தான். அவளின் முகத்தை பார்த்தவனுக்கு அவள் அவனை அடையாளம் கண்டு கொண்டதை போல தெரியவில்லை. இல்லை தெரியாததை போல நடித்து அலட்சியம் செய்கிறாள் .அவன் கிளம்பி வரும்போது அவனுடைய அம்மா சொன்னதெல்லாம் அவனுக்கு மறந்தே போனது. அவளின் அலட்சியத்தை கண்டு கோபம் தலைக்கேறியது.
"டேக் யுவர் சீட் மிஸ் பவித்ரா. ஐ யாம் சத்யா, சத்யஜித். யுவர் நியூ பிரான்ச் மேனேஜர்" வேண்டும் என்றே அந்த சத்யாவின் அழுத்தம் கொடுத்து சொன்னான்.
"குட் மோர்னிங் சார். என்னை எதுக்காக வர சொன்னிங்கனு தெரிஞ்சுக்கலாமா?" அவள் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை. அவளை முதல் முறை பார்த்தபோது அணிந்திருந்தது போல ஒரு வெளிர் நிற சுடிதார், அவளின் உருவத்திற்கும் அதற்கும் சம்மந்தமே இல்லாதது போல லூசாக இருந்தது. இழுத்து கட்டிய பின்னல், காதில் கண்ணுக்கே தெரியாத ஒற்றை கல் கம்மல், நெற்றியில் மிக சிறிய ஒரு போட்டு, அவ்வளவே தான். ஆனாலும் இரண்டு வருடங்களில் அவளின் வனப்பு கூடியிருந்ததை போல இருந்தது. அதற்கும் அவனுக்கு கோவம் வந்தது. இவளுக்கு என்ன, உடல் முழுதும் திமிர். என்னை போல எத்தனை பேரை அவமானப்படுத்தினாலோ, திமிர் பிடித்தவள். திமிர் திமிர் அதே திமிர், இவள் கொஞ்சம் கூட மாறவில்லை. மாற்றி காட்டுகிறேன் அதற்க்கு தானே உன்னை தேடி நீ வேலை செய்யும் இடத்துக்கே வந்திருக்கிறேன், சூளுரைத்து கொண்டான் மனதிற்குள்.
தொடரும்