இருந்தேன்.”
“ஓ..அப்பறம் ஏன் என்னைப் பத்தி யார்கிட்டேயும் சொல்லல?”
“உங்களைக் கவனிச்சதுல நீங்க ஏதோ நோக்கத்தோட தான் வந்துருக்கீங்கனு தெரிஞ்சுது அதே நேரம் யாருக்கும் ஆபத்து விளைவிக்குற நோக்கம் இருந்த மாதிரியும் தெரில.அதுக்கும் மேல சின்னையாவே உங்களோட நம்பி அவ்ளோ பேசுறார்னா கண்டிப்பா அவர் சொல்லி தான் நீங்க வந்துருக்கீங்கனு புரிஞ்சுது..”
“ம்ம்..சரி இதுக்காக தான் கூப்ட்டீங்களா?”
“அது வந்து..என்றவன் சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு பின் அவளிடம்,
“அன்னைக்கு சின்னையாவோட அம்மா என்னை அடிச்சது தெரியாம நடந்த விஷயம் இல்ல..”
“அப்படினா?என்ன சொல்ல வர்றீங்க?”
“அவங்க..”
“என்ன மா இங்க என்ன பண்ற!”,என்றவாறு அந்தபக்கமாய் வந்த முத்து அவர்களை நோக்கி வந்தார்.
“ம்ம் சும்மா இவரை இங்க பார்த்தேன்..அதான் அடி பட்டது சரியா போச்சா உடம்பு எப்படியிருக்குனு கேட்டுட்டு இருந்தேன்..”
“ஓ நல்லது..”
“நீங்க ஹாஸ்பிட்டலுக்கு வந்த மாதிரியே தெரியலேயே?”
“விஷயத்தை கேட்டு இரத்தக் கொதிப்பு ஆயிடுச்சு மா..அதுமட்டுமில்லாம அந்த நிலைமைல அவங்களை பாக்குற சக்தி எனக்கில்ல மா..”
“நீங்க டென்ஷன் ஆகாதீங்க ணா..நம்ம கையில என்ன இருக்கு…போய் ரெஸ்ட் எடுங்க போங்க..”
“வாம்மா நீயும் சோர்வா தெரியுறியே வந்து ஒரு வாய் சாப்பிடு முதல்ல..”,என்றவர் அவளுக்காக காத்திருக்க அதற்கு மேல் ஒன்றும் பேசத் தோன்றாமல் அவனையே பார்த்தவாறு அங்கிருந்து நகர்ந்தாள்.
ஒரு வார காலம் கடந்திருந்த நிலையில் சர்வேஷும் ராகேஷும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வரப் பட்டிருந்தனர்.சாந்திதேவி அவரது அறையிலேயே முடங்கிக் கிடந்தார்.
மகிழனின் பொறுப்பு இப்போது இன்னும் அதிகமாகி இருந்தது.கார்மெண்ட்ஸையும் சேர்த்துப் பார்க்க வேண்டியநிலை என்பதால் வீட்டிற்கு வருவதே அரிதாகிப் போயிருந்தது.
ஷியாமாவும் எப்படி என்ன வழி கிடைக்கும் என பிறர் கண்களை உறுத்தாவண்ணம் பல விதத்தில் ஆதாரங்களைத் தேட முயற்சி செய்து கொண்டிருந்தாள்.சர்வேஷிற்கு அழைப்பு வந்த எண்ணைப் பற்றி விசாரித்த போது அந்த எண்ணின் சொந்தகாரருக்கும் அவர்களுக்கும் எவ்வித