மறுநாளின் விடியல் பலத்த குழப்பங்களோடு விடிந்திருந்தது அனைவருக்கும்.காலை காபி எடுத்துச் செல்லும் போதே கல்யாணி அனைவரையும் கீழே வருமாறு கூறிவிட்டிருந்தார்.
சரியாய் ஒன்பது மணிக்கு அத்தனை பேரும் வரவேற்பிடத்தில் கூடியிருக்க சாந்திதேவியும் கூட வந்திருந்தார்.எத்தனை கூறியும் தானும் வருவதாய் கூறிய ராகேஷை சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்து வந்தார் ரமாதேவி.
ஷியாமாவும் சில நிமிடங்களில் வந்துவிட அனைவருமாய் ஒவ்வொரு மனநிலையில் இருந்த நேரம் படிகளில் கேட்ட அரவத்தில் திரும்பியவர்கள் அத்தனை பேரின் முகமும் ஆச்சரியம் அதிர்ச்சி என அத்தனையையும் தாங்கி நின்றது.
மகிழனோடு தியாதேவி மற்றும் அந்த வீட்டினரைப் பொறுத்த வரை அவரின் பாதுக்காப்பாளரும் செவிலியுமான அமுதாவும் வந்து கொண்டிருந்தனர்.
மகிழனின் கையைப் பற்றி நடந்து வந்த சந்தியா தேவி அங்கும் இங்கும் பார்த்தவாறு மற்றவர்களை கண்டும் காணாததுமாய் வர அவர்களைப் பார்த்த ஷியாமாவின் உதடுகள் புன்னகையைக் கொடுத்தன.
மூவரும் வந்து அமரும் வரை அனைவருமே அமைதியாய் இருக்க மகிழன் மெதுவாய் பேச்சை ஆரம்பித்திருந்தான்.
“சோ நாம இங்க வந்துருக்குறதுக்கான காரணம் இந்த வர்மா குடும்பத்தில் நடக்குற எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவு கட்டுறதுக்காக தான்.அதாவது இங்க நடக்குற அத்தனைக்கும் காரணமானவங்களோட முகமூடியை எல்லாருக்கும் கிழிச்சு காட்டுறதுக்காக..ஷியாமா ப்ளீஸ் கோ அ கெட்..”என்றவன் அமர்ந்து கொள்ள அடுத்த அதிரிச்சியாய் இருந்தது அனைவருக்கும்.
வழக்கமான தன் கம்பீரத்தோடு எழுந்தவள் தன்னிடம் இருந்த குறிப்பேடை அங்கிருந்த டீப்பாவின் மேல் வைத்துவிட்டு நிமிர்ந்து அனைவரையும் பார்த்து புன்னகைத்தவாறே,
“குட்மார்னிங் எவ்ரி ஒன்.எல்லார் முகத்திலேயும் இருக்குற அத்தனை குழப்பத்துக்கும் விடை சொல்றேன்.முதல்ல நான் ஷியாமா ராகவன் ப்ரம் சீபிஐ..மிஸ்டர் வர்மா வோட இறப்பை பத்தி விசாரிப்பதற்காக வந்துருக்கேன்.”
ஆஷிக்கும் மோனிஷாவும் ஒருவரை ஒருவர் அப்பட்ட அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க மற்றவர்களைப் பற்றி கேட்கவும் வேண்டுமோ..
“கேஸ் ஹிஸ்ட்ரி படிச்ச அப்பறம் ஒரு வேளை இது இற்கையான மரணமா இல்லாத பட்சத்துல கொலையாளி தப்பிக்காம இருக்கவும் வெளியில் உங்களுக்கு இருக்குற பெயருக்கு எந்த பங்கமும் ஏற்டாம இருக்கணும்ங்கிறதுக்காகவும் நான் இங்க வந்ததோட நோக்கத்தை யாருக்கும்