(Reading time: 12 - 24 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

வெளிப்படுத்தாம இருக்குறது நல்லதுனு தோணிண காரணத்தினால் மகிழன் தவிர யாருக்கும் எந்த விவரமும் தெரிவிக்கப்படல..

ஓ லெட் மீ ஸ்டார்ட்..முதல்ல மிஸ்டர் வர்மாவோட இறப்பு ஒரு திட்டமிடப்பட்ட கொலை..அதற்கு காரணமானவங்க இந்த வீட்ல இருக்குற இரண்டு பேர்.கொலையாளி ஒருத்தரும் கொலைக்கு உதவி செஞ்சவங்க ஒருத்தரும்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.நான் இந்த வீட்டுக்கு வந்தப்பறம் நடந்த சில விஷயங்கள் வச்சு சிலர் மேல சந்தேகம் இருந்தது.அதையும் தாண்டி நடந்த இரண்டு விஷயங்கள் ஒன்னு மிஸ்டர் அதுல் வர்மா மாடியில் இருந்து விழுந்தது.

அதைப் பத்தி அவர்கிட்ட நான் கேட்டபோது அவரோட பதில்ல எந்த குழப்பமும் இல்ல.யாரோ அங்க இருந்தமாதிரி தான் இருந்ததுனு உறுதியா சொன்னார்.ஆனா அவரைக் காப்பாத்தினதா சொன்ன முத்து அண்ணாவோ அதைவிட உறுதியா அங்க யாருமே இல்லனு சொன்னார்.

ஆனாலும் அதுல் சார் சொன்ன உறுதி முத்து அண்ணாவோட பதில்ல இல்ல..எதோ ஒரு விதத்துல அவர்கிட்ட ஒரு தடுமாற்றம் இருந்தது.அதை உறுதிப்படுத்துற மாதிரியே அடுத்து நடந்த விபத்து..

வீட்டுக்குள்ள மட்டுமே இருந்த அசாதாரண சூழ்நிலை வீட்டுக்கு வெளில நடக்குதுனா அதுக்கும் ஒரு காரணம் இருக்கும் இல்லையா..அதாவது வீட்டை விட்டு வெளியே போகாத இரண்டு பேரால் நடத்தப்பட்ட விஷயங்கள் மூன்றாவதா ஒருத்தரோட உதவி கிடைச்சவுடனே வெளில நடத்தப்பட்டிருக்கு.

அந்த மூணாவது ஆள்னு நான் சந்தேகப்படுறது இந்த முத்து அண்ணாவை தான்..அவர் உதவி…”

என்னம்மா பேசுற நீ..என் வயசு என்ன??இப்போ போய் நான் கொலை அது இதுனு செய்வேனா..அதுவும் இந்த வீட்டு மனுஷங்களையே!இந்த வீட்டு உப்பைத் தின்னு வாழ்றவன் மா நான்..”

பொறுங்க..இன்னும் முழுசா நான் முடிக்கலையே..நீங்க சொன்ன பாயிண்டுக்கே வரேன்..இந்த வீட்டு மனுஷங்களையே கொலை பண்ண உதவி செய்றீங்கனா இவங்க எல்லாரையும் விட நீங்க மதிக்குற ஒருத்தர் யாரா இருக்கும்.எத்தனை விசுவாசம் இருந்திருந்தா இதுக்கு நீங்க சம்மதம் சொல்லிருப்பீங்க??

உங்களுக்கு ரொம்பவே நெருக்கமானவங்க இந்த வீட்ல மிஸ்டர் அமித் வர்மாவும் தியா தேவி மேடமும் தான் இல்லையா!”

“!!!!!!”

சோ அமித் சார் இப்போ உயிரோட இல்ல..அப்போ நீங்க உதவி பண்ணிணது…”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.