விழுந்தாள்.
அவளுக்கும் இதே நிலைதானா? அதிரதன் அவளை அழைத்தான்…
இல்லை… அவனால் பேசவும் முடியவில்லை… ஆனால் ஒன்று புரிந்தது.. அதிதி முற்றிலும் மயங்கி விட்டாள். அவனைபோல சுயநினைவில் இல்லை!
அதிரதனால் சிறிதும் உடலை அசைக்க முடியவில்லை. அங்கு நடக்கப் போவதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தடுக்க முடியாது.. வெறும் பார்வையாளனாக மட்டுமே இருக்க முடியும்.
ஓ.. அதிதி…! உன்னை காப்பாற்ற முடியாமல் இருக்கிறேன்….
அந்த ஜீப்பில் ஏறியது தவறு… எச்சரிக்கையாக இல்லாதது அடுத்த தவறு. முதுகில் ஏதோ பூச்சி கடித்து விட்டது என்று அலட்சியமாக இருந்தது கடைசி தவறு. அதற்கு அதிதியின் மரணம் என்பது ரொம்பவும் அதிகம்.
"என்ன பார்த்துட்டே இருக்கே.. இவளை இப்படியே கயிற்றில் கட்டி தூக்கில் தொங்கவிடப் போறோம். அப்புறம் உன்னை அந்த மலையுச்சியில் இருந்து தள்ளி விட்ருவோம். சூயிசைட் கேஸ்.." புதியவன் கூறினான்.
"அதெப்படி மருது… தற்கொலை செய்துக்க காரணம் வேணும்ல" அருகில் இருந்தவன் கேட்டான்.
"காரணத்தை உருவாக்கிட்டா போச்சு. மனைவியின் நடத்தை சரியில்லை அதனால் கணவன் மலையில் இருந்து குதித்து செத்துபோயிட்டான்னு சொல்லிடுவோம். அம்மாவைப்போள இவளும் அவளுடைய அப்பாவைப்போல அவனும் செத்து போயிட்டாங்க. சரியா?”
“ஆதாரம் வேணுமே”
“ம்… ஆமாம்ல… போட்டோ எடுத்துடுவோம்.”
“நம்பற மாதிரி இருக்கணும்”
“சரி… இப்படி செய்யலாம். என் மச்சான் ஒருத்தன் ஊரிலிருந்து வந்திருக்காண். அவனோட இந்த பெண்ணை வச்சு போட்டோ எடுத்து இவனோட பாக்கெட்ல வச்சிருவோம்”
அதிரதனுக்கு கொஞ்சம் புரிந்தது. இவர்களை யாரோ அனுப்பி இருக்கிறார்கள். அவர்களின் நோக்கம் அதிதியை கொலை செய்வதே… அதற்கு பழைய கதையை ஃபாலோ செய்து திட்டமிடுகிறார்கள். யாராக இருக்கும்….?
தனுஜாவா…? அவன் அவளை திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் இப்படி செய்கிறாளா? ம்ஹும் இருக்காது அது ஒரு செமி லூசு… ஹீரோயின் வேலையையும் ஒழுங்காக செய்யத் தெரியாது வில்லி வேலையையும் ஒழுங்காக செய்யத் தெரியாது…