பொறுப்பு.
அந்த விஷமூலிகை பிரயோகமும் மருதுவின் திட்டமும் அவனுக்கு சந்தேகத்தை கிளப்பியது. ஒருவேளை துளசி அத்தை விசயத்தில் இதுபோல நடந்திருக்குமோ” அதை கண்டுபிடித்து உண்மையை நிருபிக்க வேண்டியது அவனுடைய கடமை!
அவனுக்கு ஒரு விசயம் தெளிவாகி இருந்தது. ‘அது’ என்பது துளசி அத்தையின் ஆவியல்ல. அது ஒரு உயிருள்ள ஜீவன். ஏனெனில் இதுவரை அவன் ‘அதை’ தொலைவில் வைத்துதான் பார்த்திருந்தான். ஆனால் இன்று அதனுடைய ஸ்பரிசத்தை உணர்ந்தான். அவன் அருகில் வந்து அந்த மூலிகை வேரினை அவன் முகத்தருகே கொண்டு வந்தபோது அவனை ‘அது’ தொட்டது.
மூன்றடி உயரம் இருக்கும் உயிரினம்…. அவன் புகை என்று நினைத்தது புகையல்ல… வெளுத்துபோன சாம்பல் நிற முடிகற்றைதான்… பராமரிப்பில்லாத தலைமுடி அடர்ந்து இருக்குமே இருக்குமே அதுபோல் இருந்தது. அத்தனைக்கும் மேல் இந்த முறை மழை நீரின் தழுவலால் பனிச்சிலை போன்று அந்த உருவம் தெரிந்தது. ஒரு லே-அவுட்… தண்ணீரினால் உருவாக்கப்பட்ட வெளிச்சம் ஊடுருவும் லே-அவுட்…
அது என்ன? அரிய வகை குரங்காக இருக்குமோ? அதிரதன் யோசித்தபடி அதிதி தோளில் சாய்த்துக் கொண்டு நடந்தான்.
தொடரும்