தெரிந்தது. தரையில் உடல் அழுத்த அவனும் ரத்தம் கக்க ஆரம்பித்தபோது வானத்தில் மின்னல் வெட்டியது.
அந்த வெளிச்சத்தில் கனகுவை ஒரு புகைமண்டலம் அழுத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. அதிரதனால் மூச்சு விட முடியவில்லை… ‘அது’ வந்து விட்டதா? ‘அது’தான் அவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறதா?
அவனுக்குள் நிம்மதி பரவ ஆரம்பித்தது. ஒரு இடியை பூமி இறக்கிய வானதேவதை அடுத்து ஒரு மின்னலை வெட்டியது… அந்த கோடி பிரகாச வெளிச்சத்தில் அதிரதனால் அந்த உருவத்தை பார்க்க முடிந்தது.
அவனுக்கு மிக அருகில் தாவித்தாவி வந்த ‘அது’ கையில் இருந்த ஏதோ ஒரு பொருளை அவனுடைய நாசிக்கு அருகில் வைத்தது. அது ஒரு மூலிகை வேர்!
மழை கொட்ட ஆரம்பிக்க… ‘அது’ உடனடியாக திரும்பி சென்று அதிதியின் தலையை வருடி விட்டு ‘அது’ மரங்களிடையே ஓடி மறைந்தது.
அதிரதனுக்கு இப்போது கைகாலை அசைக்க முடிந்தது. முகத்தில் தெளித்த மழைதுளிகள் அவனுக்கு விரைவில் உணர்வு பெற வைத்தன. படக்கென எழுந்து அமர்ந்தான். அதே சமயத்தில் அதிதியும் எழுந்து அமர்ந்தாள். அதிரதனை பார்க்கவும் துள்ளி எழுந்து ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.
“என்னாச்சு… என்னாச்சு… “ என்றபடி சுற்றும்புறமும் பார்த்தாள்.
“அவங்கள் எப்படி செத்து போனாங்க? நீங்ககூட மயங்கி விழுந்திட்டீங்களே… நான் பார்த்தேனே… என்னாச்சு?” என்றாள்.
அதிரதன் நடந்த அனைத்தையும் அவளிடம் விவரித்தான். அதிதி அவன் சொன்னதை கேட்டு…
”ரதன்… எங்கம்மாவா வந்து நம்மளை காப்பாத்தினாங்க. ஆவிக்கு அவ்வளவு பலம் இருக்கா” என்றாள்.
“இருந்திருக்கு அதிதி. ஓகே நாம் இந்த இடத்தை விட்டு விரைவாக கிளம்புவோம். யாராவது இவங்களை தேடி வந்தால் சிக்கல்தான்” என்றபடி எழுந்தான்.
அங்கிருந்த பேட்டரி மின் விளக்கை எடுத்துக் கொண்டு அந்த மெல்லிய வெளிச்சத்தில் அதிதியின் கையை பிடித்துக் கொண்டு காட்டுப் பாதையில் நடக்க ஆரம்பித்தான்.
அவனுக்குள் ஒரு தீர்மானம் இருந்தது. ‘காதல் திருமணம் செய்தவர்கள்’ என்று மருது சொன்ன வார்த்தைகள் ஒரு க்ளு தந்தது. இது அதிதியின் சித்தியிடம் அவன் சொன்னது. வேறு யாருக்கும் இது தெரியாது. அவ்வாறெனில் அதிதிக்கு ஆபத்துக்கு சித்திதான் காரணம். அதிதியை கொலை செய்ய நினைக்கும் அந்த சித்தியிடமிருந்து அவளை காப்பது அவன்