காப்பாற்றும் நிலையில் இல்லாமல் உனக்கு நடக்கப்போகும் அநியாயத்தை தடுக்க முடியாமல் தவிக்கிறேன்…
இயலாமையினால் அவன் கண்களில் நீர் பெருக அதிதியை பார்த்துக் கொண்டிருந்தான். உச்சி சூரியன் தன் கதிர்களை சூடு ஆறவைத்து மேற்கு நோக்கி நகர ஆரம்பித்தது. இன்னும் சற்று நேரத்தில் இருள் கவிழ்ந்து விடும்…
அவனால் சற்றும் அசையவும் முடியவில்லை பேசவும் முடியவில்லை. பேச முடிந்தாலாவது அவர்களின் நோக்கத்தை புரிந்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்தலாம்…
அவனுக்கு இன்னொரு கவலையும் வந்தது. அவர்கள் திட்டப்படி இருவரும் இறந்து போனாலும்கூட… அதிதியின் மீது சுமத்தப்படும் பழியை தாங்கிக் கொள்ள அவனால் நினைத்துகூட முடியாது!
காலமெல்லாம் அவள் எதற்கு பயந்தாளோ அந்த பட்டத்தைத்தான் அவளுக்கு தரப் போகிறார்கள்… கடவுளே அவளை யாராவது காப்பாற்ற வேண்டும்… வானத்தை பார்த்து வேண்ட ஆரம்பித்தான்.
இருள் சூழ்ந்த வேளையில் இருவர் வந்தனர். இருவரில் ஒருவன் புதியவன்.!
அவன் சொன்னபடி செய்யப் போகிறானா? அதிதி இன்னும் மயக்கத்திலேயே இருந்தாள். துவண்டுபோய் வாடிப்போன மலர் கொத்துபோல தரையில் விழுந்திருந்த அவளை பார்க்கவும் அதிரதனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதிதி கொஞ்சமாவது கண் விழித்தால் இந்த ஆபத்தை புரிந்து கொண்டு ஓடி விடுவாள்….
அவளுக்கு உடல் வலு அதிகம். சிலம்பம் வேறு தெரியும். இந்த தடியன்களை அவளே சமாளித்து விடுவாள். அவள் மயக்கம் தெளிந்தால் அதிசயம் நிகழ்ந்து விடும்…. அவளௌடைய உறக்கத்தை கலைக்க மழை வராதா… கடும பனி பொழியாதா. அல்லது காட்டுத்தீ உண்மையிலேயே பற்றிக் கொண்டு அந்த இடத்தையே எரித்து விடாதா…?.
“என்ன அப்படி பார்க்கிறாய்? அனைத்தும் தயாராகி விட்டது. அவ்வளவுதான் இன்னும் சிறிது நேரத்தில் அவள் செத்து போவாள். காதல் திருமணமா செய்து கொள்வீர்கள்? இப்போது பார் அத்தனையும் அசிங்கப்பட்டு சாகப் போகிறீர்கள்.” என்றபடி மருது அதிதியை நோக்கி நடந்தான்.
கையில் இருந்த கேமிராவை ஸ்டாண்டில் பொருத்தினான். கனகு அவன் கையிலிருந்த பேட்டரி மின்விளக்கை எரிய விட்டான். காமிராவில் வியூ பார்த்த மருது “ஓகே… இந்த வெளிச்சம் போதும்” என்றான்.
அதிரதனால் நடக்கப் போவதை தடுக்க முடியாது என்று புரிந்து விட்டது. அட்லீஸ்ட் அவன்