அவளாக இருக்காது. பிறகு யார்?
“டேய் கனகு நீ இங்கேயே இரு… நான் போய் என் மச்சானை கூட்டிட்டு வரேன். அப்புறம் போட்டோ எடுக்கறத நைட்ல எடுப்போம். அப்போதான் தப்பா தெரியும். எடுத்துட்டு பிரிண்ட் போட்டு அவனோட பாக்கெட்ல வைப்போம்”
“ஆனால் செல்போன்ல எடுத்து அவன் பாக்கெட்ல வைக்கலாம்ல”
“அவங்கிட்ட செல்போன் இல்லேடா. நான் சொன்னபடி செய்யலாம். நீயும் அந்த டுப்ளிகேட் ஆஃபிசரும் இவங்களை பாத்துக்கங்க. ஒண்ணும் ஆபத்தில்ல… அவனால நாளைவரைக்கும் கைகாலைக்கூட அசைக்க முடியாது. இவள் காலைல எழுந்திரிப்பாள். அதுக்குள்ள தூக்கு போட்றுவோம்”
என்ன ஒரு கிரிமினல் ஐடியா? அதிரதனுக்கு கோபம் வந்தது. இவங்கள்ளாம் யாரு? இவனுங்களை யார் அனுப்பியது என்று சொல்லிட்டாவது போகலாம்…? அதிரதனுக்கு தன் மேலேயே கோபம் வந்தது.
அதிதியின் மீதிருந்த அளவு கடந்த அன்பினாலும் அவளுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்ற பதட்டத்தினாலும் கவனக் குறைவாக இருந்து விட்டான். இப்போது அவளுடைய உயிருக்கு ஆபத்து…
ப்ச்… அவனால் எதுவுமே செய்ய முடியாது…!. உடலை அசைக்க முடிந்தாலாவது கட்டை பிரிக்கலாம்… அப்படியே ஜடமாக இருக்கிறான்…
அதிதியை பார்த்தான். அவள் முழு மயக்கத்தில் இருந்தாள். ஏன் அவளாலும் அந்த சூழலை யூகிக்க முடியவில்லை… ரொம்பவும் ஜாக்கிரதையாக இருப்பாளே… அதைவிட இந்த காட்டில் இருக்கும் ஆபத்துகள் அவளுக்கு அத்துபடி… அவளும் ஏன் கொஞ்சமும் யோசிக்காமல் அவனுடன் ஜீப்பில் ஏறினாள்.
ஒருவேளை அவளுக்கும் அவனுடைய உயிருக்கு ஆபத்து வந்துவிடக் கூடாதே என்ற எண்ணம் இருந்திருக்குமோ? அது உண்மையாக இருக்க வேண்டும். காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டால் அவன் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பதட்டம் அவளுக்கும் வந்திருக்கும்…
அவர்கள் ஜீப்பில் ஏறிய தருணத்தை நினைத்து பார்த்தான். அதிதி அவனுடைய கையை பதட்டமாக பிடித்தது நினைவிற்கு வந்தது. அந்த கை பயத்துடன் பாதுகாப்பு தேடி நீளவில்லை.. தன்னுடைய குழந்தையை ஆபத்தில் இருந்து இழுக்கும் தாயின் முயற்சியாகத்தான் அவனுக்கு தோன்றியது.
ஓ அதிதி! நீ நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தாய்… ஆனால் இப்போது உன்னை